Sunday 13 October 2019

Sleeping Position and awarness video....

Picture Message









நோய்கள் எதுவும் தீண்டாமல் #ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நோய்கள் எதுவும் தீண்டாமல் #ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஒவ்வொரு நாளும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. சாப்பாட்டில் தவறாது இரண்டு காய்கறிகளாவது இடம் பெறும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டுக்குப் பின் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

3. உணவுக்கு முன்பு காய்கறிகளைப் பச்சையாக நறுக்கிப் போட்ட வெஜிடபிள் சாலட் சாப்பிடலாம்.

4. நொறுக்குத்தீனிக்கு நாக்கு பரபரக்கிறதா? ‘ஸ்நாக்ஸ்’ வேண்டாம். அதற்குப் பதில் முளைவிட்ட பட்டாணி, பயிறு வகைகளைச் சாப்பிடலாம்.

5. ஒவ்வொரு வேளை உணவையும் அனுபவித்து உண்ணுங்கள். ரசித்து, ருசித்துச் சாப்பிடுங்கள்.

6. ஃப்ரெஷ் ஆன காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

7. சர்க்கரை அம்சம் கொண்ட குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள், மிட்டாய்வகைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.

8. எதையும் சமைத்த உடனேயே சாப்பிடுவது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடாக்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

9. உணவில் அவ்வப்போது கீரையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. என்றேனும் ஒருநாள் ‘முழு உண்ணாவிரதம்’ இருங்கள். உணவுக்குப் பதில் காலை, மதியம், மாலை, இரவு காய்கறி சூப், பழரசம் மட்டும் சாப்பிடலாம்.

11. காபி பழக்கத்திற்கு டாடா சொல்லுங்கள். எதையாவது குடிக்கவேண்டும் எனத் தோன்றினால் ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கலாம்.

12. பொரித்த உணவுப்பண்டங்கள் உடலுக்குக் கெடுதல். உங்கள் உணவிலிருந்து அவற்றை விலக்கி விடுங்கள்.

13. வாரத்தில் ஏதாவது ஒருநாள் காலை டிபனுக்குப் பதிலாகப் பழங்கள் மட்டுமே சாப்பிடுங்கள். மதியம் வரை வேறு எதுவும் உண்ணாமல் நேராக மதிய உணவு அருந்துங்கள்.

14. ‘டயட்’டில் இருக்கிறோம் என்பதற்காக உணவைத் தியாகம் செய்யாதீர்கள். சாப்பிடாத வேளைகளில் ஃப்ரெஷ் ஆன பழங்கள் அல்லது வெஜிடபிள் ஜூஸ் அருந்தலாம்.

15. காபி, சோடா,கோலா ஆகிய பானங்களை அருந்த வேண்டாம்.

16. நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் உங்கள் மெனுவில் இடம் பெறட்டும்.

17. உப்பை அளவாகப் பயன்படுத்துங்கள்.

18.குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விளையாடுங்கள். உங்கள் குழந்தைப் பருவம் நெஞ்சில் நிழலாடுமே! அது அல்லவா ஆனந்தம்?

19. காய்கறிகளை வறுப்பதோ பொரிப்பதோ கூடாது. வேக வைப்பதே சிறந்தது.

20. சமைக்கும்போது உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், கேரட், தக்காளி ஆகிய காய்கறிகளின் மேற்புறத் தோலை நீக்க வேண்டாம். கழுவி வெறுமனே சுரண்டிப் போட்டால் போதும்.

21. நீங்கள் உண்ணும் உணவில் தேவையான கலோரிகள், புரதச்சத்து ஆகியவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் உணவைத் திட்டமிடுங்கள்.

22. எப்போதும் அவசர அவசரமாக உணவை அள்ளி விழுங்காதீர்கள். மென்று தின்றால்தான் உண்ணும் உணவு செரிக்கும்.

23. தியானமும் பிரார்த்தனையும் மனப்பயிற்சிகள். தினமும் 20 நிமிடங்கள் அதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

24. நீங்கள் உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் தரும் உணவைத் தேர்ந்தெடுங்கள்.

25. மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என எதுவானாலும் நீங்களே நேரடியாகச் சென்று வாங்குங்கள். உற்றுப் பார்த்து, முகர்ந்து பார்த்து, தொட்டுப் பார்த்து ஒவ்வொன்றையும் வாங்கினால் எந்த நோய்க்கிருமியும் உங்களிடம் வாலாட்ட முடியாது.

26. மனம் வெறுமையாக இருந்தாலோ, களைப்பு ஏற்பட்டாலோ அதனை ஈடுகட்டுவதற்காகச் சிலர் சாக்லேட்களைச் சாப்பிடுவார்கள். ஜாலி மூடில் ஐஸ்க்ரீம், ஸ்நாக்ஸ் என வெளுத்துக் கட்டுவார்கள். இப்படி உங்கள் உணர்வுகளை உணவுடன் முடிச்சு போடாதீர்கள். பின்பு அதுவே ஒரு பழக்கமாகிவிடும். ‘மூடு’ எதுவாக இருந்தாலும் ஜூஸ் மட்டும் அருந்துங்கள்.

27. சினிமா தியேட்டரில் ‘சிப்ஸ்’ கொறிக்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? அதற்கு ‘நோ’ சொல்லிவிட்டு ‘பாப்கார்ன்’ கொறியுங்கள்.

28. உணவுவேளையின் போது டைனிங்டேபிளில் அமர்ந்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது பேப்பர் படிப்பது, காரசாரமான விவாதங்கள் என்ன வேண்டிக் கிடக்கிறது? முழுக்கவனமும் உணவின் மீதே இருக்கட்டும்.

29. இரவு உணவின்போது ஒட்டுமொத்த குடும்பமும் டி.வி. முன் ஆஜராகி சாப்பாட்டை உள்ளே தள்ளுவது விரும்பத்தக்கதல்ல. அதைவிட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து கலகலப்பான மனநிலையில் சாப்பிடுங்கள்.

30. சுவாசப்பயிற்சி நுரையீரலுக்கு நல்லது. மூச்சை நன்றாக உள்ளுக்கு இழுத்து, மெதுமெதுவாக விடவும். இதுபோல் தினமும் பலமுறை செய்யுங்கள்.

31. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். காமெடி சினிமாக்கள் பார்ப்பது, சரமாரியாக ஜோக்குகள் அடிப்பது,உரக்கச் சிரிப்பது, நகைச்சுவை புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றை உங்கள் இயல்பாக்கிக் கொள்ளுங்கள். தேவன், சாவி, சுஜாதா, சோ, நாகேஷ், கவுண்டமணி, செந்தில்,மணிவண்ணன், விவேக்... ஆஹா! நினைத்தாலே ஹி...ஹி...ஹி!

32. மது அருந்தும் ஆசாமியா நீங்கள்? உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

33. இரவில் படுக்கைக்குச் செல்லும்போது மகிழ்ச்சியான மனநிலை தேவை. தூக்கம் கண்களைத் தழுவும்போது அமைதி உங்கள் நெஞ்சில் நிலவட்டும் குட்நைட்! ஸ்வீட் ட்ரீம்ஸ்!

34. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைக்காமல் டான்சிங், ஸ்விம்மிங், ரோலர் ஸ்கேட்டிங் என்று காலில் சக்கரம் கட்டிக் கொள்ளுங்கள்.

35. ஒவ்வொரு நாளும் அதிகாலையில்‘வாக்கிங்’ செல்லுங்கள்.

36. கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் எளிய உடற்பயிற்சிகளுக்கு என்று காலையில் 10 நிமிடங்கள், மாலையில் 10 நிமிடங்கள் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

37. மாடிப்படிகளில் ஏறிச் செல்ல முடிகிறபோது லிஃப்ட், எஸ்கலேட்டர் எல்லாம் எதற்கு? படியேறுவது காலுக்கு வலிமை சேர்க்கும்.

38. தினமும் தியானம் மனதுக்கு நல்லது.

39. ஒருபோதும் மூக்கு முட்ட சாப்பிடாதீர்கள்.

40. ஓய்வெடுப்பது என்பது ஒரு கலை. சும்மா இருப்பது ஓய்வு ஆகாது. உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஓய்வு கொடுங்கள். குறைந்தது 20 நிமிடங்கள் ஓய்வு அவசியம்.

41. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடிப்பது நல்லது.

42. புகை உங்கள் உடலுக்குப் பகை. பழக்கம் இருந்தால் அடியோடு விட்டுவிடுங்கள்.

43. உங்கள் ஆழ்மனத்திற்கு என்று இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடலை 20 நிமிடங்களுக்குத் தளர்த்திவிட்டுக் கொள்ளுங்கள். அந்த ஆரோக்கியமான உடல்நிலையை மனதால் உணருங்கள்.

44. வேலை செய்ய, பொழுதுபோக்க என்று உங்கள் நேரத்தைச் சரியாகப் பகுத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் ‘பேலன்ஸ்’ மிக முக்கியம்.

45. காய்கறிகளை நறுக்குவதற்கு முன் சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவுங்கள்.

46. நண்பர்களை அடிக்கடி சந்தியுங்கள். வாய்ப்பு இல்லாவிட்டால் டெலிபோனிலாவது பேசுங்கள். தனிமை விலகும், இனிமை கூடும்.

47. இதுவரை செய்யாவிட்டால் என்ன, இன்று முதலாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

48. பிறரது தவறுகளை மன்னித்துவிடுங்கள். தேவையில்லாத மனபாரம் குறையும்.

49. முன்பின் தெரியாதவராக இருந்தால் என்ன, எல்லோரிடமும் நட்பு பாராட்டுங்கள்.

50. தினமும் குறைந்தது அரைமணி நேரம் குடும்பத்தினருடன் அரட்டை அடியுங்கள்.

51. ஒவ்வொரு நாளும் குறைந்து 15 நிமிடங்களாவது காது குளிர இசையைக் கேளுங்கள்.

52. நல்ல புத்தகம், நல்ல நண்பன். வாரம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

60 வினாடிகளில் எளிதாக உறங்க '4-7-8 டெக்னிக்'

60 வினாடிகளில் எளிதாக உறங்க '4-7-8 டெக்னிக்'

60 வினாடிகளில் எளிதாகஉறங்க '4-7-8டெக்னிக்' முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்சுறியல் நிபுணரான மருத்துவர் ஆண்ட்ரூவெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

இதை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்குவினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும்.

அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்தி வைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக் காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும்.

அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமாக நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.இந்த முறையினால் 7 வினாடிகள் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைத்து நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகிறது.

இது உடலை தளர்வடையச் செய்கிறது. மேலும், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறிவிடுகிறது. இந்த முறையின் மூலம் வெளியேறும் தேவையற்ற எண்ணங்களால் நிம்மதியான உறக்கம் வந்துவிடும

நோயின்றி வாழ்



1. அதிகாலையில் எழுபவன்..

2. இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்..

3.  முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்...

4. மண்பானைச் சமையலை உண்பவன்..

5. உணவை நன்கு நொறுங்க மென்று உண்பவன்...

6.  உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்...

7. வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்...

8. கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்....

9. மலச்சிக்கல் இல்லாதவன்...

10. நீரை  கொதிக்கவைத்து குடிப்பவன்...

11. துரித உணவுக்கு அடிமையாகதவன்...

12. படுத்தவுடன் தூங்குகிறவன்...

13. எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்...

14. இயற்க்கை விவசாயம் செய்து வாழ்பவன்...

15. வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்....

16. உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்....

17. பத்து நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்....

18. ரீபைண்ட் ஆயில் உபயோகிக்காமல் செக்கு எண்ணையை உபயோகிப்பவன்...

19. அயோடின் உப்பை உண்ணாமல் கடல் கல்லுப்பை பயன்படுத்தவன்....

20. வெள்ளை சர்கரைக்கு பதிலாக கருப்பட்டி பனைவெல்லம் உபயோகிப்பவன்...

21. மரபணு மாற்றப்படாத காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுபவன்...

22. ஜங்க் உணவுகளை உண்ணாதவன்...

23. புகை, மது, மாது போன்றவற்றை விரும்பாதவன்...

24. உடல் உழைக்காமல் உண்ணாதவன்...

25. தடுப்பூசிகள், மருந்து, மாத்திரைகளை உபயோகிக்காதவன்...

மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் நோயின்றி வாழ்வான்....!!!!

#டெங்குகாய்ச்சலைவிரட்டும்_நாட்டுமருந்து..!

 #தேனுடன்_பப்பாளி இலை சாறு அதிசயம் போல வேலை செய்கிறது.  12 மணி நேரத்திற்குள் பிளேட்லெட் எண்ணிக்கை 68,000 லிருந்து 2,00,000 ஆக அதிகரிப்பதனை #ரத்தபரிசோதனையின் மூலம் எளிதாக அறியலாம்..

1.காய்ச்சல் இருப்பவருக்கு காலை மாலை இருவேளைக்கும் 20mlகொடுக்கலாம்....

2.காய்ச்சல் முழுமையாக குறையும் வரை குடிக்க வேண்டும் ....இருவேளையும் உணவுக்கு முன்பு அருந்துதல் நலம்...

3.பப்பாளி இலை சாறுடன் தேனை கலந்து ஜூடிப்பதால் ரத்தத்தில் உள்ள ரத்த செல்களை செறிவூட்டவும், ரத்த அணுக்களை அதிகரிக்கவும் செய்கிறது....

4. காய்ச்சல் இல்லாதவர்களும் வாரம் ஒருமுறை குடிப்பதால் ரத்தத்தில் உள்ள செல்கள் புத்துயிர் பெற ஏதுவாகும்..பக்க விளைவுகளற்றது...செலவில்லாதது...

முள்ளங்கியின் மருத்துவ பயன்

✍ இயற்கை வாழ்வியல் முறை
🌿🌿🌿🌿🌿🌿 முள்ளங்கியின் மருத்துவ பயன்
🌿🌿🌿🌿🌿🌿

முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன. மேலும் முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் தாது உப்புக்களையும் அளிக்கின்றன.
🌿🌿🌿🌿🌿🌿
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி, கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதில் மூள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.
🌿🌿🌿🌿🌿🌿
வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது, சிவப்பு முள்ளங்கி சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கியில் கால்சியம் சத்து மற்றும் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுகிறது.
🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

 🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.
🌿🌿🌿🌿🌿🌿
பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சனைகளுக்கு முள்ளங்கிப் பிஞ்சு சாறு சிறந்த மருந்தாகும்.

🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.
🌿🌿🌿🌿🌿🌿
சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ள, சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருக்கும் பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.
🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.
🌿🌿🌿🌿🌿🌿
ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பயனளிக்கும்.
🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.
🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.
 🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கி இலை, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.
🌿🌿🌿🌿🌿🌿
இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும். சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.
🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும். முள்ளங்கி சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும்.
🌿🌿🌿🌿🌿🌿
இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.
🌿🌿🌿🌿🌿🌿
இந்த முள்ளங்கியால் வாத நோய், வயிற்றெரிச்சல், உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும்.

🌿🌿🌿🌿🌿🌿
சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கோர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.
🌿🌿🌿🌿🌿🌿
இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

🌿🌿🌿🌿🌿🌿
முள்ளங்கி
ஜூஸை மாதத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை எப்போதுமே ஏற்படாது.   முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளது. ஆய்வுகளிலும், முள்ளங்கி ஜூஸ் வயிறு, குடல், சிறுநீரகம் போன்ற இடங்களில் வரும் புற்றுநோய்களைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.
🌿🌿🌿🌿🌿🌿
  முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து, அதை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும். குறிப்பு முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து குடிப்பது என்பது முடியாத ஒன்று. ஆகவே அந்த முள்ளங்கி ஜூஸை, கேரட் அல்லது ஆப்பிள் ஜூஸ் உடன் கலந்து குடியுங்கள்
🌷🌷🌷🌷🌷🌷
🌿🌿🌿🌿🌿🌿
உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

பித்தமே பிரதானம்.. பித்தமே சர்வ சக்தியும் !!!

பித்தமே பிரதானம்.. பித்தமே சர்வ சக்தியும் !!!

பித்தம் அடங்கினால் பேசாமல் போ என்பது சித்தர் வாக்கு..

பித்தம் அதாவது உஷ்ணம் ஆக்கவும் செய்யும் அதே சமயம் அழிக்கவும் செய்யும் !!!

நாம் நமது தாய் தந்தை பாட்டன் பூட்டன் பிறந்து  வாழ்ந்த  இடத்தில் இருந்து வேறு தொலைதூர இடத்திற்கு குடிபெயர்ந்து
போனால் நம் சரிரத்தில் பித்தம் அதிகரிக்கிறது.

 அந்த காலத்தில் பெண்களை வெகு தூரத்தில் எல்லாம் திருமணம் செய்து கொடுக்க மாட்டார்கள் !!!

பித்தமே உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதது.

அதே பித்தம் தான் நோய்வர காரணமாக அமைகிறது.

அளவுக்கு மிறினால் அது அமுதானாலும் நஞ்சு தானே..

நாம் என்பது இந்த பஞ்சபூதமான கலவையினால் ஆன உடல்.

இந்த பஞ்சபூத சக்தியான உடம்பை இயக்குவது இந்த உயிர்.

உடல் உஷ்ணம் அதிகரிக்க பித்தம் பிரதானம்.

நான் ஏற்கனவே சொன்னது போல் நம் வம்சாவளி முதாதையர்கள் வாழ்ந்த இடத்தில் நம் உடம்பும் உயிரும் பரிச்சியம் ஆயிருக்கும்.

அந்த சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நமது மரபணுவும் பரிச்சியம் ஆயிருக்கும்.

அந்த சூழலில் இருந்து நாம் வெகு தூரத்திற்கு சென்று வாழ்வோமேயானால் உடல் அணுக்களின் செயல்பாடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிளது.

அந்த ஆதிர்வானது உடல் இயக்கத்தை பாதித்து ஒவ்வொரு உறுப்புகளும் அதன் செயல்ப்பாட்டை துரிதமாக்க முற்படுகிறது ஆனால் புதிதான சூழலுக்கு  உடன்பட நமது மரபணு அனுமதிக்காது.

ஆனாலும் நமது உறுப்புக்கள் சமன் செய்ய முயற்சித்துக்கொண்டு தான் இருக்கிறது.

( நம் உடலில் உள்ள மரபணு நமது முதாதையரின் உண்ட உணவு அவர்கள் சந்தித்த நோய் அதை குணப்படுத்திய விதம் உடல் வாகு சிந்தனை எல்லாமே நமது மரபணுவில் பயனித்துக்கொண்டு தான் இருக்கிறது.

அந்த ஆரோக்கியமான மரபணுவை நமது உடலில் பிரவேசிக்க விடாமல் தடுப்பதற்காக தீட்டிய வெகுநாள் திட்டம் தான் மரபணுமாற்றிய உணவு பொருள்கள் !!!

 அதனால் குழந்தையின்மை அதன் முலமாக நமது மரபணுவை அழிக்க செயற்கை கருவூட்டல் திட்டம்.

செயற்கை கருவூட்டல் மூலம் நமது முதாதையரின் மரபணுவை நமது உடலுக்குள் பிரவேசிக்கமல் தடுப்பது அதன் முலம் நோய்யை கொண்டுவந்து அந்த நோய்யை வைத்து வியாபாரம் செய்வது தான் மனித குல விரோதிகளின் திட்டம்

 (இலுமினாட்டி திட்டம்)

இதனால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கிறது.

அதன் விளைவாக பித்தம் கூடுகிறது.

இதுவே உடலின் நோய் உருவாக ஏதுவாகிறது.

மனிதர்களை 7 வகையாக பிரிக்கலாம்

1. வாததோஷம் மட்டும் தனித்திருப்பது.

 2. பித்த தோஷம் மட்டும் தனித்திருப்பது.

3. கபம் மட்டும் தனித்திருப்பது என தனியே இருக்கும்

3 வகை.

 4. வாத பித்தம்
 5. பித்த கபம்.
6. வாத கபம் என இரட்டை தோஷங்களின் ஆதிக்கமுடைய 3 வகை.

 7. 3 தோஷங்களும் அதிகமிருந்து ஆதிக்கம் செலுத்தும் அரிதான ஒருவகை என்பன அவை.

இதனை ஒருவரின் பிரகிருதி என்பர்.

பித்ததோஷமே, செரிமானத்துக்கும், உருமாற்றத்துக்கும் காரணமாகிறது.

இது ஆரோக்கியத்துக்கு மிகவும் அடிப்படையான, தேவையான செயல். இது சரிவர நடந்தால் உடல்நலம் சரியாக இருக்கும்.

உடலின் வனப்புக்கும், பிரகாசத்திற்கும் காரணமாகிறது.

 பார்வை, பசி, தாகம், ஞாபகசக்தி, புத்தி கூர்மை, புலன் உறுப்புகளின் செயல்திறன் உடலின் மென்மை மற்றும் சக்தி ஆகியவற்றுக்கு காரணமாகிறது.

 சுரப்பிகளின்
செயல்பாடுகளுக்கு காரணமாகிறது.

நம் உள் உறுப்புகள் சிறுகுடல், பெறுங்குடல்,இதயம், இருதயஉறை,
நுரையீரல், கல்லீரல், பித்தப்பை, இரப்பை, மண்ணீரல், சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை, மூவெப்ப மண்டலம்
ஆகிய 12 இராஜ உருப்புக்களுக்கும் பித்தமே பிரதானம்.

 குறைந்தால் உடல் சமாளித்துக்கொள்ளும்
( குறைவதற்கு வாய்பு மிக குறைவு ).

நமது உடல் என்றைக்காவது 95 டிகிரி பாரன்கீட் சென்றதை கண்டது உண்டா நீங்கள்..???) ஆனால் அதிகமானால் உடலே ஆட்டம் கண்டுவிடும்.

ஆகவே தான் நான் சொல்கிறேன் பித்தமே பிரதானம்..

பித்தமே சர்வ சக்தியும்..ஆக்க சக்தியும் அதுவே அழிவு

 (இங்கு அழிவு என்பது நோய்யை குறிக்கிறது) சக்தியும் அதுவே..

இதில் இனைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை பாருங்கள். சிறுகுடல் பெருங்குடல் கபம் தான் என்றாலும் அதை இயக்கும் சக்தி பித்தமே.

 அதனால் தான் நாம் முன்னோர்கள் குளித்ததும் சாப்பிட கூடாது என்றனர் !!!

 குளித்ததும் வயிறு குளிர்ந்து இருக்கும்.

 அப்போது உஷ்ணம் (பித்தம்) இல்லாமல்  சிறு குடலால் ஜீரணம் செய்ய முடியாது.

ஆதலால் தான் குளித்து முடித்து அரைமணி நேரம் கழித்து உணவு அருந்த சொன்னார்கள் நம் முன்னோர்கள் !!!

 குளித்ததும் உணவு அருந்தினோமேயானால் அந்த ரசாயணம்    கலந்த உணவுக்கு உஷ்ணம் ஜீரணிக்க போதுமானதாக கிடைக்கும் வரை அதிக நேரம் சிறுகுடலில் இருக்க நேரிடும் அதனால் சிறுகுடல் உட்சுவர்கள் பாதிப்படைய நேரிடும் !!!

நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி எடுத்துக்கொள்வதின் சூட்சமமும் இதுவே !!!

சித்தர் காலத்தில் சோதிக்கப்பட்ட மருந்து எல்லாமே பித்தத்தை பிரதானமாக கொண்டு தான்.

அகத்தியர் பாடலை ஆராய்ந்து பார்த்தால்  உங்களுக்கே புலப்படும்.

 தீர்க்க முடியாத நோய்க்கு உங்கள் விதி பயனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று பெயர் சூட்டிவிட்டார்கள்.

அதே பித்தத்தை பிரதானமாக கொண்டு இப்போது உள்ள மானிடர்களுக்கு 
சிகிச்சை அளித்தால் மருந்து வேலை
செய்வதில்லை

மாறாக மருந்து நீர்த்து போகிறது அல்லது  தேகத்தின் பித்தத்தால்(நெருப்பு) கொடுக்கப்படும்
மருந்து எரிந்து போகிறது என்று ஆனித்தரமாக சொல்லலாம்.

குறிப்பு

பிறந்து ஒரு வருடம் வரையில் குழந்தையை வெளியில் விசேசதிற்கோ இல்லை வேறு ஏதாவது பண்டிகைக்கோ எடுத்து சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் குழந்தை அழ ஆரம்பிக்கும் உடனே குழந்தை வயிற்றில் சுத்தமான விளக்கெண்ணெய் தேய்த்தால் அந்த குழந்தை அழுவதை நிறுத்திவிடும்.

எப்படி உஷ்ணம் அதிகரித்தது என்பது இப்போது புரிகிறதா...???

பெரியோர்கள் சொல்வார்கள் குழந்தைக்கு பலரது கண் பட்டிருக்கும் என்று.....

கண் என்பது உஷ்ணம் வெளிப்படும் ஒர் இடம் !!!

 அந்த பார்வையில் இருந்து வந்த உஷ்ணம் ( பித்தம்) தாக்கி இருக்கும் என்பது பொருள்..

மாதவிடாய் உள்ள நாட்களில் பெண்கள் உடல் இயல்புக்கு மாறாக உஷ்ணம் அதிகரித்து காணப்படும்.

ஆகவே சில தெய்வீக மூலிகைகளை தொடக்கூடாது என்பார்கள் !!!

 ( மருகு,தொழுதன்னி etc..).

இன்றைய அதிநவின வளர்ச்சி அடைந்த உலகம் என்று சொன்னாலும்.

எந்த நவின இயந்திரத்தை கொண்டும் நமது மரபணுவை ஆராய்வது அதன் செயல் திறனை பரிச்சித்து பார்பது என்பது இயலாத காரியமே..

முதலில் இயந்திரம் என்றால் என்ன..??? நம் அறிவை வைத்து கண்டுப்பித்தது தானே அந்த அதிநவின இயந்திரம்..???

 என்னத்தான் அதிநவின இயந்திரம் ( auto intelligent machine or robo) ஆனாலும் நாம் எந்தமாதிரி கட்டளைக்களையை கட்டமைத்து அந்த இயந்திரத்திற்கு சக்தி கொடுத்தோமோ அதற்கு ஏற்றவார்தானே எதிர் வினை கொடுக்கும்..

 அந்த இயந்திரத்தை கொண்டு பஞ்சபூத சக்தியை ஆராய்வது என்பது இயலாத காரியம் !!!

புரிந்திருக்கும் என நம்புகிறேன்.இதை விட எளிதாக என் எண்ணத்திற்கு சிந்தனைக்கும் சொல்வடிவம் கெடுப்பது கடினம்.

அடுத்த பதிவில் பற்பம் செந்தூரம் கொண்டு செய்யும் மருந்தை பற்றி பார்ப்போம். வெறும் கடுகு அல்லது அரிசி எடையே  அளவே கொடுத்து குணமாக்கும் மருந்து அது.

அது வரையில் எனது எல்லா பதிவையும் படித்து தெளிவு பெறுங்கள்.. நன்றி

தகவல் இறை அருள் வைத்தியர் மாலிக்
8220320197

நன்றி சிரவண குமா

மனிதகுலத்தினை_காப்போம்..!!!

"தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்,
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான். "

இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர்.ஆனால் இதிலுள்ள உண்மை என்னவெனில்...

#தென்னையை_விதைப்பவன், அது குறுகிய காலத்தில் வளர்ந்து குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் சிரட்டை, கீற்று, பிஞ்சு, நார் மற்றும் தென்னம்பாளை, தென்னங்கல், கொப்பரை, எண்ணெய், மரசாமான்கள் என பல பொருட்களின் நன்மைகளை கொண்ட உணவுப் பொருட்களைத் தின்று அனுபவித்துவிட்டு வயதாகி சாவான் என்பதே உண்மை....

 #பனையை_விதைப்பவனோ,  முதலில் விளைவிக்கும் தலைமுறை பனையின் நன்மைகளை முழுமையாக அனுபவிக்க இயலாது என்பதே உண்மை...மேலும் அது வளர பல ஆண்டுகள் ஆகும் எனவே பார்த்துவிட்டு சாவான் என்பது கிராமத்து பழமொழி...

பனையை விதைத்தவரின் அடுத்த சந்ததியருக்கு பனைக்குருத்து, பனையோலை, நுங்கு, பதநீர், பனம்பழம், பணங்கூழ், பனைஎண்ணை,பங்கல்கண்டு, பனஞ்சர்க்கரை, கருப்பட்டி மற்றும் மரசாமான்கள் என பல நற்பலன்களை அள்ளித்தருவதோடு நாட்டு மருத்ததுவத்திற்கு பெரும்பங்கினை அளிக்கவல்லது என்பதே உண்மை...

இப்பழமொழியின் உண்மையரியாமல்...

தென்னை விதைப்பவன் தேங்காயை உண்பதினால் அதிக கொழுப்பு சேர்ந்து நோய்கள் பீடித்து இறந்துபோவான் என்பதும் வதந்தியே...

பனையை விதைப்பவன் மரம் வளருவதனை பார்த்துக்கொண்டே இறப்பான் என்பதும் வதந்தியே...

#குறிப்பு:

இரண்டு மரங்களுமே மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் #வரங்கள்..!!!!

ஆதலினால் பயந்தரக்கூடிய இதனை போன்ற மரங்களை அதிகளவில் நடுவோம்!!!

சிறுநீரக பாதிப்பு

சிறுநீரக பாதிப்பு

அதற்க்கு முன்னால், பாதிப்பு இல்லாததன் காரணம் என்னவெனக் கூறுகிறேன்.  "வெண்பூசணி" மோர்குழம்புதான் அது.

°°செய்முறை:-

##வெண்பூசணி காயை முதலில் கொஞ்சம் தண்ணீர்விட்டு வேகவைக்கவும்,  பிறகு  தேங்காயுடன் பச்சைமிளகாய், சின்னசீரகம்  சேர்த்து அரைக்கவும், பிறகு வழக்கம்போல் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை , பெருங்காயம் சேர்த்துத் தாலித்து மல்லி இலை தூவி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகப் பை நன்கு வலுவடையும். உடலின் சூடு தனியும்.

இயற்கை மருத்துவம் :-

இயற்கை மருத்துவம் :-

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""

25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை……

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை……

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது.

நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா?

கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால்  கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.

பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா?

இது என்ன மருத்துவம்?

கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா?

நோயை அதிகப்படுத்து வதற்கு வைத்தியர் தேவையா?

கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம்.

இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை.

மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது.

நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது.

ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது.

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான கண்ணில் கிடையாது.

இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது.

இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம்.

இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.

கண் பார்வை குறைபாடு நீங்க……

1, முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்;

கண் பார்வை குறைபாடு நீங்கும்.

2, கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும்.

கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.

3, முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

4, இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

5, வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.

6, முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.

7, இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும்.

விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும்
குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது.

இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது.

ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து ,

மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.

பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும்.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உச்சி வெயிலில் அலையக் கூடாது.

முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர்.

இது_குணமாக:

முருங்கை விதை – 100 கிராம்

மிளகு – 100 கிராம்

இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்
தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம்
சூடேறி எண்ணெய்கசியும்.

அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.

பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை.

இதை ஆங்கிலத்தில், “#காட்டிராக்ட்” என்பர்.

கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது.

பிறந்தது முதல்,
கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது.

கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது.

கண் புரை நோய்,
40 வயது முதல் துவங்கலாம்.

முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும்.

கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும்.

இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

கண் பார்வை குறைபாடு சரி செய்யலாம் ....

வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன்.

நாம் நம் வீட்டு  அறையில் தினமும் அகழ்விளக்கு ஏற்ற வேண்டும்.

அந்த  ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.

அந்த  ஒளியில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும்.

அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது.

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும்.

எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.

பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும்.

அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பற்றி கூறுகிறேன்.

1.மனக் கவலை தூள் படும்

2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்

3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்

4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்

5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்

6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்

7.ஒற்றைத்தலைவலி சரியாகும்
எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம்.

தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.

Name of Herbal Leaves






























பிரண்டையின் பயன்கள்

 நன்றி நாட்டு மருத்துவ குழு

பிரண்டையின் பயன்கள்

* பிரண்டை துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும்.
* செரிமானக் கோளாறைப் போக்கும்.
* மலச்சிக்கலை நீக்கும்.
* குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும்.
* உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
* நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
* ஆண்மையைப் பெருக்கும்.
* கப நோய்கள் நீங்கும்.
* பிணியினால் நொந்து மெலிந்த உடல் வன்மை பெறும்.
* எலும்பு முறிவைக் கூட்டுவிக்கும்.
* பிரண்டை கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு.
* பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியசத்துக்கள் உள்ளன.
* பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு தினந்தோறும் இரு வேளைசாப்பிட்டு வந்தால் சுவாச காசம் (ஆஸ்துமா) குணப்படும்.
* பிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தைச் சாப்பிட்டு வந்தால், கப நோய்கள் நீங்கும்.
* பிரண்டை தண்டுகளை சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர குடித்தால் எலும்புகள் பலம் பெறும்.

தினம் ஒரு கீரை !

தினம் ஒரு கீரை !
உணவோடு சேர் அக்கறையா !
 வைட்டமின் தாதும் இதில் அபரிமிதமா இருக்கு அற்புதமா பொறிக்கக் கூடாது இதை அதிகமாய் அவிக்கவும் கூடாது ! எக்காலத்துக்கும் ஏற்றது ஆயினும் இராத்திரியில் உடல் தாங்காது வாடி வதங்கியதை ஒதுக்கீடு நன்கு நீரில் அலசுவதே தோது !
அசைவத்துடன் கீரை உடம்புக்கு ஆகவே ஆகாது !
சிறிது நீர் போதும் கீரை வெந்து தனிய !
 கீரை வகைகள் பல உண்டு எந்த கீரை எந்நோய் தீர்க்கும் ஏற்றதை உணர்ந்து தினம் உண்டு வாழ்வில் ஏற்றத்தைக் காண்க !
இரத்த சோகையை விரட்டும் முருங்கைக்கீரை !
ஊட்டமளிக்கும் முளைக்கீரை !
உடல் வலிமைக்கு அரைக்கீரை
கண்ணுக்கு தெளிவூட்ட பொன்னாங்கண்ணி !
மூலத்தை சரிபடுத்தும் பசலை
 குழந்தைகளுக்குச் சிறுகீரை !
மூட்டுவலிக்கு முடக்கத்தான் சோர்வைப் போக்கும் தவசி அகத்தைச் சுத்தமாக்கும் அகத்தி புண்ஆற்றும் பருப்புக் கீரை !
புத்துணர்வுக்குப் புளிச்சக்கீரை ! வயிற்றுப்பசிக்கு வெந்தயக்கீரை வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி ! நினைவாற்றலுக்கு வல்லாரை !
சளித் தொல்லைக்கு தூதுவளை !
புற்றுநோய்க்கு பாலக்கீரை
பசியை தூண்டும் முள்ளங்கிக்கீரை!
ஆண்மை பெருக முருங்கை !
 கீரையில் உணவோடு மருந்து இது தானே நமக்கு விருந்து தினம் ஒன்ன சேர்த்திடுங்க தீங்கு வராம காத்திடுக !

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
வேர்க்கடலை,
பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும்,
ராகியை
சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்!
ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???
தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்!
உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்???
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
 இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.
இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்...

மருந்தெல்லாம் மருந்தல்ல...!

மருந்தெல்லாம் மருந்தல்ல...!

மருந்து வாங்கப் போறீங்களா?

[இதனை எழுதிய திரு. இ.க. இளம்பாரதி, முதுநிலை மருந்தியலை, மருந்துண்ணறிவியல் துறையில் பயின்றுள்ளார் (Master of pharmacy in pharmacology). இப்பொழுது பெங்களூரில் ஒரு தனியார் மருந்து நிறுவனத்தில் மனித வழி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார். இன்றைய காலகட்டத்தில் மருந்துகளின் நதிமூலம், மருந்துகளில் கலப்படம், போலிகள் உருவானது, உலகில் பல இடங்களிலும் நடந்த துயர்படுத்தும் பக்க விளைவுகள், பல்வேறு ஆய்வுகள், மருந்துகளின் எதிர் மறை விளைவுகள், உலகில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் எப்படி உலவுகின்றன என்று பல விஷயங்களையும் ஆழமாக ஆய்ந்து இங்கு வெளியிடுகிறோம்.]

மருந்து. இந்தச் சொல்லைப் பலர் தமது வாழக்கையில் கேட்டிருக்கலாம். அவ்வப்போது பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட வயதைக் கடந்தவுடன், பலருக்கு மருந்து தான் வாழ்க்கையே.

நிலம், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயம் என்ற இந்த ஐம்பூதங்கள் தான் மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவை. சில வேளைகளில், இந்த ஐம்பூதங்கள் இருந்தும் பலரால் உயிர் வாழ முடியாது. அந்த நேரத்தில் அனைவரும் சரணடையும் ஒரே இடம் இந்த மருந்து. உடல் நலமில்லாத போது தனது பழைய வலிமையை மீட்டுக் கொடுக்கும் போதும், மருந்தின் முக்கியத்துவத்தை மனிதன் தெளிவாக அறிவான்.

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் ஆங்கில மருந்துவத்தின் வளர்ச்சி விசுவரூபம் எடுத்தது. இதற்கு இரண்டாம் உலகப்போர் ஓர் முக்கிய காரணமாக இருந்தது. ஒரு குறுகிய‌ காலகட்டத்துக்குள், மருத்துவ உலகின் முடிசூடா மன்னனாக ஆங்கில மருத்துவம் உருவெடுத்தது.

ஆங்கில மருத்துவத்தின் இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம், உடனடியாக கிடைக்கும் தற்காலிக நிவாரணம் தான். ஒரு பொத்தான் அளவுள்ள மாத்திரை அல்லது சில நீர்த்துளிகளாகக் கண்ணாடிக் குப்பியில் அடைக்கப்ப‌ட்ட மருந்து, உடலின் உள்ளே சென்றவுடன் சில மணித்துளிகளிலேயே அந்த நோயில் இருந்து தற்காலிக நிவாரணம் கிடைகிறது.

சரி, இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆங்கில மருத்துவத்தில் என்ன பிரச்சனை?

அதன் சிறப்புகள் தான் பிரச்சனையே. ஒரு பொத்தான் அளவுள்ள மருந்து, நோயில் இருந்து தற்காலிக நிவாரணத்தை தருகிறது என்றால், அந்த மருந்து எவ்வளவு வீரியமிக்க வேதிப் பொருள்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும். ஒரு நோயைக் குணப்படுத்துவதற்காக, நாம் சாப்பிடும் இந்த வேதிப்பொருள்கள் நோயை மட்டும் குணப்படுத்தினால் மகிழ்ச்சி. ஆனால், கூடவே பல உறுப்புகளின் வேலைகளிலும் சென்று மூக்கை நுழைப்பது தான் பிரச்சனையே.

ஃபினைல் புரோபனோலமைன் (Phenyl Propanolamine) மூக்க‌டைப்பு மற்றும் சளியைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படும் மருந்தாக நமது நாட்டில் வலம் வந்து கொண்டிருந்தது. இதே மருந்து, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பசியைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதாவது, சளி மற்றும் மூக்கடைப்புக்காக நாம் சாப்பிடும் மருந்து. சளி மற்றும் மூக்கடைப்பைச் சரி செய்வதுடன் நின்று விடாமல், தேவையில்லாமல் நமது பசியையும் குறைக்கிறது.

இது ஒரு சிறு உதாரணம் தான். இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால், நீங்கள் கால் சுண்டுவிரலின் வலிக்காக‌ச் சாப்பிடும் மருந்து, உடலில் ரத்தத்தில் கலந்து கால் சுண்டு விரலின் வலியைக் குறைப்தோடு மட்டுமில்லாமல், அந்த மருந்துக்கான ரிசெப்டார்கள் (Receptors) (ரிசெப்டார்கள் என்பவை புரதத்தினால் ஆன மூலக்கூறுகள், இந்த ரிசெப்டாரில் சென்று பொருந்தித் தான் உடல் உறுப்புகளின் வேலையை மாற்றியமைக்கும்) உடலில் எங்கெல்லாம் இருக்கின்றவோ, அங்கே சென்று அதில் அமர்ந்து வேறு வேலைகளிலும் ஈடுபடுகிறது.

ரிசெப்டார்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம் மற்றும் மூளை உள்பட மற்ற உறுப்புக்களிலும் குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ இருக்கின்றன. இதனால், எந்த ஒரு மருந்தும் நோயைத் தீர்ப்பதோடு நின்று விடாமல், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம் மற்றும் மூளை உள்பட பல முக்கிய உறுப்புகளின் வேலைகளிலும் தலையிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

நான் காய்ச்சலுக்காக மருந்து சாப்பிடுறேன். எனது சிறு நீரகம், மூளை, இதயம் என அனைத்துமே சீராகத்தானே இயங்குகின்றன. எந்த ஒரு மாற்றத்தையும் உணரவில்லை என்று நீங்கள் சொல்லலாம். இதற்கான‌ விளக்கம் என்னவென்றால், நீங்கள் காய்ச்சலுக்காகச் சாப்பிடும் மருந்தின் மூலக்கூறு, அதன் வேதியியல் அமைப்பு (Chemical Structure) உடலில் உள்ள எந்தெந்த ரிசெப்டார்களில் பொருந்தக் கூடியதாக இருக்கிறதோ, அவை அனைத்திலும் பொருந்தும். அந்தப் பொருந்தக்கூடிய ரிசெப்டார்கள், உங்கள் சிறுநீரகத்தில் இருந்தால், கண்டிப்பாக அதன் வேலைகளில் மாற்றங்கள் நிகழ்த்தும்.

இதில் குறிப்பிடும்படியான செய்தி என்னவென்றால், அனைத்து விதமான மருந்துகளும் செயலாற்றக் கூடிய பல வகையான ரிசெப்டார்கள், உடல் முழுவதும் பரவியிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மருந்தை நாம் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் போது தான், இந்தப் பிரச்சனை விசுவரூபம் எடுக்கிறது. ஏனென்றால், காலப்போக்கில் நோய் குணமாவதோடு, அந்த மருந்து பொருந்தக் கூடிய ரிசெப்டார்கள் அதிகம் உள்ள மற்ற உறுப்புகளும் பழுதடைந்து அல்லது செலிழந்து விடுகின்றன. எனவே, உறுப்புக்களில் பிரச்சனை அல்லது செயலிழப்பு என்று வரும் போது தான் உங்களால் உணர முடியும்.

இது போன்று தனது வேலையைச் செய்வதோடு நின்று விடாமல், மற்ற உறுப்புகளின் வேலைகளிலும் அதிகமாகத் தலையிட்டு இறுதியில் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பதாகக் கருதக் கூடிய மருந்துகள் தான், அவ்வப்போது உலகில் பல நாடுகளில் தடை செய்யப்படுகின்றன. ஆனால், நம்மில் பலர் படிக்காமலேயே பாதி மருத்துவராக ஆகிவிட்ட நமது நாட்டில், இது போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய மருந்துகள் தடை செய்யப்படாமல் இருப்பது தான் வருத்தம் அளிக்கக்கூடிய செய்தி. இது போன்ற காரணங்களால் தான் அவ்வப்போது, மருந்தினால் ஏற்படும் பல உயிர் இழப்புகள் எச்சரிக்கை மணியாக ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

பல நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்று தெரிந்தும் இந்தியாவில் தடை செய்யப்படாத காரணத்தால் மக்கள் நலன் விரும்பும் பல மருத்துவர்கள் கூட அம்மருந்துகளை மக்களுக்குப் பரிந்துரைக்கும் நிலைக்குக் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கக் கூடிய விசயமாகும். மருத்துவத்துறையைச் சார்ந்தவர்களான மருந்தாளுநர்கள் மற்றும் செவிலியர்களில் பலருக்கும், இதுபோல் தடைசெய்யபட்ட மருந்துகளைப் பற்றித் தெரியவில்லை என்பது வேதனை அளிக்கக்கூடியது. இவர்களின் நிலையே இப்படி என்றால், மற்ற துறைகளைச் சார்ந்தவர்கள் மற்றும் சராசரிப் பாமரனின் நிலை என்ன?

மற்ற துறைகளைச் சார்ந்தவர்களும் மற்றும் சராசரிப் பாமரனும் மருந்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா என்றால், ஆம் என்பது தான் பதில். மருந்தைப் பற்றி முழுவதும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதில்லை. ஆனால் மருந்து பற்றிய விழப்புணர்வு (அடிப்ப‌டைத் தகவல்கள்) அனைவருக்கும் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். உயிரைக் காப்பாற்றுகின்ற மருந்து, அந்த உயிரையே பறிக்கும் போது தேவை தானே!

மருந்து பற்றிய விழப்புணர்வு அவ்வளவு முக்கியமா?

நாம் வெளியே உடுத்தும் ஆடை, அணிகலன், முகப்பூச்சு போன்றவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில், ஒரு சதவீதமாவது உடலுக்கு உள்ளே எடுத்துக் கொள்ளும் மருந்து மற்றும் உணவுக்குக் கொடுத்திருப்போமா? காலில் அசுத்தம் ஒட்டி விடாமல் இருக்கவே, நான்கு கடைகளில் ஏறி இறங்கி காலணி வாங்கும் நாம், மருந்தே அசுத்தமாக மாறி நிலை பற்றித் தெரிந்து வைத்திருக்கிறோமா, என்ன? அவ்வளவு ஏன், உடலை விட்டு வெளியேறும் கழிவை வாங்கும், கழிவறை உபகரணத்தையே தரமானதா என்று பார்த்து வாங்கும் நாம், உடலுக்கு உள்ளே செல்லும் மருந்தைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை.

நமது உதிரத்தை வெப்பப்படுத்தும் செய்தி, நிறுவனங்கள், இந்தியாவில் மருந்தை விற்பனை செய்யும் போது, இந்த மருந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் (USFDA) அனுமதி பெற்றது என்று கூவிக் கூவி நமது மருத்துவர்களிடம் சொல்லி விற்கும் பல மருந்து நிறுவனங்கள், அதே அமெரிக்க மற்றும் மருந்து நிர்வாகத் துறையினரால் தடை செய்யப்பட்ட பல மருந்துகளை, இந்தியாவில் சத்தம் இல்லாமல் விற்றுத் தள்ளுகின்றன.

இந்தியா என்ன உங்களுக்கு தேவையற்ற மருந்தைக் கொட்டும் குப்பைத் தொட்டியா? என்றல்லவா கேட்கத் தோன்றுகிறது.

எனவே நம் உடலில் பாதிப்புகள் ஏதேனும் வந்தாலும் நம்பகமான, தரமான ஆயுர்வேதம், சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம், அக்குபங்க்சர், இயற்கை மருத்துவம், யுனானி போன்ற பாரம்பரியமான மருத்துவ முறைகளில் சிகிச்சை பெறலாம் (கவனம்: இதிலும் போலிகள் உண்டு. நல்ல மருத்துவரை விசாரித்துத் தேடி கண்டு பிடியுங்கள்). பொதுவாக, மாற்று மருத்துவம் உடலின் சமநிலையை மீட்டெடுக்கவே சிகிச்சை அளிக்கிறது. இதனால் உடல் தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்கிறது. மேலும், உடலை முழுமையான முறையில் அணுகுவதால், நோயாளியின் உடல் மற்றும் மனநிலையில் நேர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மாற்று மருத்துவமுறைகள் நோயாளியின் உடலுடன் ஒத்திசைந்து வேலை செய்கின்றன. மருத்துவர் நோயாளியுடன் அதிக நேரம் செலவிடுகின்றார். அவரது வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துகின்றார். இது நோயாளியை ரிலாக்ஸாக உணர வைத்து, குணமாக்குதலை துரிதப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக செலவும் குறைவு. அலோபதி மருத்துவத்தால் கைவிடப்பட்ட பலரை மாற்று மருத்துவமுறை காப்பாற்றியுள்ளது.

அவசர மருத்துவ உதவிக்கு ஆங்கில மருத்துவம் தானே கைகொடுக்கிறது என்று கூறுவது மாற்று மருத்துவத்தைப் பற்றியோ, உடலின் இயல்பைப் பற்றியோ தெரியாதவர்களின் கூற்று. “எமெர்ஜென்ஸி சூழல்களையும் மாற்று மருத்துவர்களால் எளிதாகச் சமாளிக்க முடியும். அதற்குத் தேவை உடலைப் பற்றிய அடிப்படைப் புரிதல். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நல்ல மருத்துவரைக் கண்டறிவது தான். ஏனென்றால், போலிகள் எல்லா இடத்திலும் இருக்கின்றனர். எது எதற்காகவோ மெனக்கெடும் நாம், நமக்கான நல்ல மருத்துவரைக் கண்டறியவும் சிரத்தை எடுக்கலாமே”.

இன்று நாம் கவலைப்படும் கடைசி விஷயமாக உடல்நலன் இருக்கிறது. ஆனால், மனித இனத்திற்கு அதுதான் அடிப்படை. நாம் உடலைக் கவனிப்பதில்லை. இயற்கையான அதன் உயிர் ஆற்றலை அறிந்து கொள்ளாமல், அதை இயந்திரத்தைப் போல அலட்சியமாகக் கையாள்கிறோம். முழுவதுமாக வெட்டெறியப்பட்ட ஒரு மரம், அதன் வேரில் இருந்து துளிர்த்து வருவதில்லையா? அதுபோலத்தான் மனித உடலும். உடலுக்கு எதிரான பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டாலே அது சிறப்பாக இயங்கும். மருந்து வர்த்தகச் சூழ்ச்சிக்கு நாமும் ஒரு எலியாக பலிகடாவாக ஆகாமல் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

வாழ்க வளமுடன், நலமுடன்.

இஞ்சி


கால் கிலோ இஞ்சில.

இஞ்சியை கறிக்கு டீக்கு மட்டுமே யூஸ் பண்றோம்.

பாருங்க இஞ்சி இருந்தால் ங்களுக்கு எவ்வளவு வெட்டி செலவு மிச்சம் என்று!!!!!

நோய்களை  நீக்குவதில் இஞ்சி – சமையலறை மருத்துவர்!

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                          
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்கு வெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனி உப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம் சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

(Disclaimer: இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான்)

மருத்துவர் முதலில் நமது நாக்கைப் பார்ப்பது ஏன் தெரியுமா?

மருத்துவர் முதலில் நமது நாக்கைப் பார்ப்பது ஏன் தெரியுமா?

அதன் பின்னால் உள்ள விளக்கம் இதோ

உடம்பு சரி இல்லாத நேரத்தில் மருத்துவரை அணுகும் போது அவர் முதலில் பார்ப்பது நமது நாக்கைத் தான். அதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பின் வரும் சிலவும் அதற்கு முக்கிய காரணம். அதாவது உங்கள் நாக்கு இருக்கும் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பதை கணிக்க முடியுமாம்.

சிவப்பு நிற நாக்கு.

உங்கள் நாக்கு அதிக சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.

மஞ்சள் நிற நாக்கு.

நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய் உள்ளதற்கான அறிகுறியாம்.

பிங்க் நிற நாக்கு.

உங்கள் நாக்கு பிங்க் நிறத்தில் இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தம்.

இளம் சிவப்பு நிறமுள்ள நாக்கு.

இளம் சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால், அது இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய் உள்ளதைக் குறிக்கிறது.

வெள்ளை நிற நாக்கு.

ஒருவேளை உங்கள் நாக்கு வெளிர் வெள்ளை நிறத்தில் இருந்தால் உங்கள் உடலுக்கு நீர்ச்சத்து குறைவாக உள்ளது என்றும் நுண்ணிய கிருமிகளின் தொற்று மற்றும் காய்ச்சல் இருப்பதையும் குறிக்கிறது.

காபி நிறமுள்ள நாக்கு.

நாக்கின் நிறம் காபி நிறத்தில் இருந்தால், ஒருவேளை அது நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதைக் குறிக்கிறது.

சிமெண்ட நிறமுள்ள நாக்கு.

உங்க நாக்கு சிமெண்ட் நிறத்தில் இருந்தால், அது செரிமானம் மற்றும் மூலநோய் உங்களுக்கு உள்ளது என்பதைக் குறிக்கிறது.

நீலம் நிறமுள்ள நாக்கு.

நாக்கின் நிறம் நீலமாக இருந்தால், அவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது என்பதைக் குறிக்கிறது.

சித்தரத்தை

சித்தரத்தை...                                                           

சித்தரத்தை என்ற அழகான பெயரை கொண்ட இந்த தாவரம், இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. கிழக்காசிய நாடுகளில் இதனை ‘சீன இஞ்சி’ என்று அழைக்கிறார்கள். இது காரச் சுவை கொண்டது.

இந்த தாவரம் குறுஞ்செடியாக வளரும். இலைகள் நீண்டு காணப்படும். இதன் கிழங்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்ந்த பின்பு அடர்ந்த சிவப்பு நிறமாக மாறும். இது மருத்துவகுணம் நிறைந்தது. நறுமணம் கொண்டது. இதில் இருக்கும் நறுமண எண்ணெய் இதன் மருத்துவதன்மைக்கு காரணமாகும்.

‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்?’ என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. அந்த அளவுக்கு தொண்டையில் சேரும் கபத்தை வெளியேற்றும் சக்தி சித்தரத்தைக்கு இருக் கிறது.

நம் உடலில் தொண்டை மிக முக்கியமான உறுப்பு. நோய்களை தடுக்கும் சுவர் போன்றது இது. அதனால் தொண்டையை நன்றாக பாதுகாக்கவேண்டும். அதற்கு சித்தரத்தை உதவுகிறது. இருமல் ஏற்படும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்கவேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை அப்போது தோன்றும். இருமல் நின்றுவிடும்.

சிலருக்கு உடல்சூடு காரணமாகவும் இருமல் தோன்றும். அப்போது சித்தரத்தையுடன், சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து சுவைக்கவேண்டும். இது இருமலை போக்கும் சிறந்த மருந்து.

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சித்தரத்தையை கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அவைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஜீரணத்தை தூண்டும்.

சித்தரத்தை சிறந்த மணமூட்டி. சிறு துண்டை வாயில் இட்டு சுவைத்தால், வாய் நாற்றம் நீங்கும். ஈறுகளில் உள்ள நோய்த்தொற்றும் சீராகும். சிலருக்கு வாகனங்களில் பயணம் செய்யும்போது, வாந்தி ஏற்படும். அந்த தொந்தரவு இருப்பவர்கள் பயணம் செய்யும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு சுவைத்துக்கொண்டிருந்தால் வாந்தி வராது. வயிற்றை புரட்டுவது போன்ற அவஸ்தைகளும் ஏற்படாது. முற்காலத்தில் கப்பலில் பயணம் செய்கிறவர்கள் சித்தரத்தையை சுவைக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.

வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு இது நல்ல மருந்து. மேற்கண்ட பாதிப்பு கொண்டவர்கள் 10 கிராம் சித்தரத்தையை நன்கு இடித்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகவேண்டும். இதற்கு வலியை நீக்கும்தன்மையும் உண்டு. மூட்டுகளில் ஏற்படும் இறுக்கத்தை சீராக்கும். தசை பிடிப்பை நீக்கும். மூட்டு வலி, வீக்கம் இருப்பவர்கள் சித்தரத்தையை இடித்து, கஞ்சியில் கலந்து சாப்பிடவேண்டும்.

தொற்று நோய் காரணமாக ஏற்படும் காய்ச்சலுக்கு 10 கிராம் நிலவேம்பு இலையுடன், 10 கிராம் சித்தரத்தையை சேர்த்து, 200 மி.லி. நீரில் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகவேண்டும். உடல் வலி குறையும், நன்கு பசி எடுக்கும்.

குழந்தைகளை குளிக்கவைத்து தலைதுவட்டிய பின்பு, சிறிதளவு சித்தரத்தை தூளை அவற்றின் தலை உச்சியில் தேய்த்தால் சளி பிடிக்காது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வழங்கப்படும் பிரசவ லேகியத்தில் சித்தரத்தை சேர்க்கப்படு கிறது. சுவாச நோய்களுக்கான மருந்துகள், இருமல் மருந்துகள், வலி மற்றும் ஜீரண நோய்களுக்கான மருந்துகளில் சித்தரத்தை சேர்க்கப்படுகிறது.

சித்தரத்தை குறுஞ்செடிகளை எளிதில் வீடுகளில் தொட்டிகளிலேயே வளர்க்கலாம். இதன் பூக்கள் மிக அழகாக இருக்கும். செடியில் நறு மணம் வீசும். இதன் கிழங்குகளை சீவி, காய்கறிகளை கலந்து சூப்பாக தயார் செய்து பருகும் வழக்கம் கிழக்காசிய நாடுகளில் உள்ளது. சாலட்டாக தயார் செய்தும் சாப்பிடுகிறார்கள்.

10 கிராம் அளவுக்கு கிழங்கை எடுத்து, அரைத்து, எலுமிச்சம்பழ சாற்றில் கலந்து, தேனும் சேர்த்து சாப்பிட்டால் இருமல் குறையும். பற்களும் பளிச்சிடும்.

சித்தரத்தை, சித்தரத்தை தூள், சித்தரத்தை கிழங்கு போன்றவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.                                       ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.

சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் விலக, சில துண்டுகள் சித்தரத்தையை தூளாக்கி அத்துடன் அதே அளவு கற்கண்டைக் தூளாக்கி இவற்றை, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தினமும் பாலில் கலந்து பருகிவர, ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் யாவும் விலகிவிடும்.

 ஆஸ்துமா குணப்படுத்த :சிலர், இரைப்பு இருமல் எனும் ஆஸ்துமா பாதிப்பால், மூச்சடைக்கும் வேதனையை அடைவார்கள். அவர்கள், சித்தரத்தை, அதிமதுரம்,  தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து,  தேனில் குழைத்து சாப்பிட்டுவர, பாதிப்புகள் விரைவில் நீங்கிவிடும்.

எலும்புகள் பலம் பெற :இந்த பாதிப்புகள் யாவும் நீங்க, நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொண்டு,  இந்தப்பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என ஒரு மண்டலம் என்ற கால அளவில், நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டு வர, வெகுநாட்களாக துன்பமளித்த வலிகளின் பாதிப்பு குறையும். எலும்புகளின் ஆற்றல் மேம்படும்.

உலர்த்தி சிறு துண்டுகளாக வெட்டிய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று தம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர, வறட்டு இருமலை தணிக்கும்.

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும். மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை  நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும்
குறையும்...

மரகத்தரிக்காய்

#மரகத்தரிக்காய்

அதிசய கத்திரிக்காய் !!!

உலகிலேயே அதிகபடியான மிளகாய் காரம்
மற்றும் மசாலா பயன்படுத்தும் இந்தியாவில்
வயிற்று புற்றுநோய் மிக மிக குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

கத்திரிக்காய்

இவ்வளவு கடுமையான காரம் மசாலா பயன்படுத்தும் இந்தியாவில் கத்தரிக்காய் பயன்பாடு உள்ளதால் அவற்றில் உள்ள வேதிபொருட்கள் புற்றுநோயை அழிக்கும் தன்மை உள்ளதை அறிந்த பன்னாட்டு கம்பெனிகள் மரபணு மாற்றம் செய்த கத்தரியை புகுத்தியுள்ளதாக ஒரு தகவல் உள்ளது !!!

ஆக இவன் பன்னாட்டு கார்ப்பரேட் சதிகாரர்கள் எவ்வளவு சதி செய்தாலும் அதை முறியடித்து வெற்றி பெற நம் சித்தர்கள் நமக்கு அருளிய அதிசய மூலிகைகள் ஏராளம்

 கத்தரி வகையில் உயர்ந்த மருத்துவகுணம் நிறைந்தது

மர கத்திரிக்காய்

ஆம் மரத்தில் காய்க்கும் கத்திரிக்காய் !!!

இது மரபு அனு மாற்றம் செய்யாதது !!!

இது மலைகளில் மட்டுமே கிடைக்கும்

கத்திரிக்காய் என்றால் அனைத்து நோய்களையும் கத்திரித்து அகற்றவும் காய் என்று அர்த்தம்

 இவற்றிற்கு கோழை அகற்றி என பெயரும் உண்டு.

 நுரையீரலில் உள்ள நீர் மற்றும் சளியை அகற்றும் பண்பு உண்டு.

தொண்டை பகுதியில் ஏற்படும் அனைத்து விதமான நோயையும் போக்கிவிடும் இவற்றை உட்கொள்ளும் போது. தைராய்டு நோயையும் இவை குணமாக்கும்.

மேலும் இவ்வகை காய் மரத்தில் காய்ப்பதால் இதற்கு தனி உயர்ந்த மருத்துவ குணம் உண்டு

2020 ல் இந்தியாவில் சுமார் 50 கோடி பேருக்கு புற்றுநோய் இருக்கும் என மதிப்பிட்டு
புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்க ஐரோப்பிய, அமெரிக்க கம்மெனிகள் தயாராகி வருவது எத்தனை பேருக்கு தெரியுமா?

கத்தரிக்காயை விட பல மடங்கு சிறப்பு வாய்ந்த
மர கத்தரியை பயன்படுத்தி உடல் நலத்தை பேணுவோம்.

புற்றுநோய் வராமல் தடுப்போம்.

இந்த வகை கத்திரிக்காயை நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் கத்தரிக்காய் பொரியல் செய்து சாப்பிடலாம்

கத்திரிக்காய் ஊறுகாய் செய்து வைத்து சாப்பிடலாம்

இந்த அபூர்வ அதிசய கத்திரிக்காய் தேவைப்படுவோர்
தொடர்பு கொள்ளவும்

வைத்தியர் ஹெர்பெஸ்
திருச்சி

8220320197

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை

நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு
 சிறந்தது.

*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

பயமுறுத்தாதீர்கள்!

பயமுறுத்தாதீர்கள்!*

1) காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது.

(2) 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது.

(3) இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும்போது பித்தப் பை பயப்படுகிறது.

(4) ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும் போது சிறுகுடல் பயப்படுகிறது.

(5) நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடும் போது பெருங்குடல் பயப்படுகிறது.

(6) சிகரெட் மற்றும் பீடி போன்ற புகை, அழுக்கு மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்றை நீங்கள் சுவாசிக்கும்போது நுரையீரல்கள் பயப்படுகின்றன.

(7) அதிகப்படியான வறுத்த உணவு, ஜங்க், துரித உணவுகளை உண்ணும் போது கல்லீரல் பயப்படுகிறது.

(8) அதிக உப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவைச் சாப்பிடும் போது இதயம் பயப்படுகிறது.

(9) சாப்பிடச் சுவையாகவும் மற்றும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும்போது கணையம் பயப்படுகிறது.

(10) இருட்டில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும்போது கண்கள் பயப்படுகின்றன.

(11) எதிர்மறை (நெகடிவ்) எண்ணங்களைச் சிந்திக்க ஆரம்பிக்கும் போது மூளை பயந்து போகிறது.

உங்கள் உடலின் பாகங்களில் அக்கறை கொள்ளுங்கள். அவற்றை பயமுறுத்தாதீர்கள்.
இந்த உடல் பாகங்கள் அனைத்தும் சந்தையில் எளிதாகக் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் மிகவும் விலை உயர்ந்தவை. அநேகமாக உங்கள் உடலும் ஏற்றுக் கொள்ளாது. எனவே உங்கள் உடல் பாகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்

முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய்......

முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய்......

நீண்ட, அடர்த்தியான, கரு கருவென இருக்கும் கூந்தலை விரும்பாதவர் எவரேனும் உண்டோ?.

ஆனால் நடப்பதோ எதிர் மறையானது . முடி உதிர்வு......

முடி உதிர்வதற்கு பல காரணங்களை சொல்கின்றனர். தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, டென்ஷன், பலவிதமான ஷாம்புகளை உபயோகிப்பது, நிறைய மாத்திரைகளை சாப்பிடுவது என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த முடி உதிர்வதை வீட்டில் எளிதாக கிடைக்கும் சில பொருட்களை வைத்து, ஒரு எண்ணெய் தயாரித்து உபயோகித்து ஓரளவு சரி செய்யலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்...

தேங்காய் எண்ணெய் - 100ml
செம்பருத்தி பூ - நான்கு
செம்பருத்தி இலை - பத்து
மருதாணி இலை - சிறிது
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும். மறுநாள் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, மருதோன்றி, வெந்தயம் அனைத்தையும் ஒரு மிக்ஸியில் ஒன்றாக போட்டு கெட்டியாக, நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைப்போட்டு நன்கு கிளறவும். கைவிடாமல் கிளறவேண்டும். மிதமான தீயில் இருக்கவேண்டும்.

முதலில் எண்ணெய் சொட சொடவென சத்தத்துடன் கொதிக்க ஆரம்பிக்கும். பின்னர் நேரம் செல்ல செல்ல சத்தம் அடங்கி ஒருவித மணம் வரும். எண்ணையும் தெளிந்துவர ஆரம்பிக்கும். இப்பொழுது அடுப்பை அணைத்துவிடவும்.

ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளவும்.

இதை தினமும் தலையில்(ஐந்து அல்லது ஆறு சொட்டு) தேய்த்துவர முடி கருமையாக நீண்டு வளரும். முடி உதிர்வதும் கட்டுப்படும்.

எல்லா வகை மூலமும் நீங்க:-

எல்லா வகை மூலமும் நீங்க:-

தானென்ற மூலத்துக்கு உறுதி சொல்வேன்
தயங்காத மூலமென்ற தெல்லாம் போகும்
தேனென்ற புல்லறுகு துளிரவைத்து
செழுமையுள்ள தண்ணீரில் குடித்தாயானால்
ஊனென்ற மூலமெல்லாம் தீரும் தீரும்
உத்தமனே ஈரஞ்சு நாளில் மைந்தா
வீனென்ற மூலமெல்லாம் ஒழிந்து போகும்
- அமுத கலைஞானம் 1200

அறுகம்புல்லை பிடிங்கி வந்து தூய்மையான தண்ணீரில் போட்டுகொதிக்க வைத்து நன்கு கொதித்ததும் அதை இறக்கி வடித்து அரை டம்ளர் வீதம் பத்து நாட்கள் காலை-மாலை உணவுக்கு முன்பு அருந்தினால் எல்லா வகை மூலமும் கண்டிப்பாக நீங்கி போகும் என்கிறார் அகத்தியர்.