Saturday 8 December 2018

Food Digestion









Fruits











Body Parts





முழங்கால் வலி

 "முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.
              பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன்.
           
             கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து தெரிவித்தார்கள்.

                 பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.

                    அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது. 
                   
                      குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

                      பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது.

                  சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...

                  பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் .
                   பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..
               மூலம் நோய் உள்ளவர்களுக்கு
உரிய  மருந்தாகவும், ஏற்ற உணவாகவும்
பயன்படுகிறது.
                 இந்த மூலிகையை "குத ரோக நாசினி" என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

                    இவ்விதமாக நிறைய வயிறு சம்மந்தப்பட்ட  குறைபாடுகள் பிரண்டையால் குணமாகிறது.
மற்றும் இயற்கை கால்சியம்  அதிகம் உள்ளது  .
                   இவ்வாறு இருக்க  நாம்  ஏன் அனாவசியமாக  கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் செய்து கொள்ள வேண்டும். யோசிங்க.....

                 வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
                  உலகிலேயே கடினமான பொருள் வைரம் ஆகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பையே உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

               தேகத்தை வஜ்ஜிரமாக்கும் என்பதினால்தானோ என்னவோ
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" எனப்படுகிறது. 
                 
                 இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல்  அணைவரும் உபயோகித்து பயன்   அடைந்தால்  நான் மிகவும் மகிழ்வேன்.
                         Dr.M.C.Ramamurthy,
                            9150001551.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

முடி உதிர்வை கண்டு இனி கவலைப்பட வேண்டாம்..!!

முடி உதிர்வை கண்டு இனி கவலைப்பட வேண்டாம்..!!
தமிழர்களின் கைமருந்து நெல்லிச்சாறு !!
👉இயற்கையோடு ஒன்றிவாழ்ந்த நம் தமிழ் முன்னோர்கள் உணவு முதல் மருந்து வரை இயற்கையின் வளங்களை பயன்படுத்தி வந்தனர். அதனால் அவர்களின் ஆயுட்காலமும் 100க்கும் அதிகமாக இருந்தது. இன்றைய சூழ்நிலையில் மனிதன் உடல்பருமன், சிறுவயதிலே கண் குறைப்பாடு, இளநரை, சொத்தைப்பல், நீரிழிவு நோய் என பல நோய்களை விலைகொடுத்து வாங்கிவிடுகிறான். இன்று ஒருவர் 100 வயதை கடந்துவிட்டால் பிரம்மிப்பிற்குரிய விஷயமாக உள்ளது. காரணம், நாம் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வெறும் ருசிக்காக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க மறந்துவிட்டோம்.

👉இந்த நிலையை முழுமையாக மாற்ற நாம் மறந்து போன, மறைந்து போன நமது ஆரோக்கியமான பாரம்பரிய பண்டங்களையும், உணவுகளையும் மீண்டும் அறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அந்த வகையில் நம் தமிழர்கள் பயன்படுத்திய உணவு மருந்துகளில் ஒன்று 'நெல்லிக்காய்".


👆👆👆
நெல்லிக்காய் :

👉தினசரி நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளனர். உடல்நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது. இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகை உண்டு. பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி போன்றவை உண்டு. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை விளையும் இடங்களில் கிடைக்கும். நெல்லிக்காயை சாறாக உண்ணும்போது திரவ வடிவில் உள் செல்வதால் இன்னும் வேகமாக உடலில் சேருகிறது.

நெல்லிச்சாற்றின் பயன்கள் :

👉நெல்லிச்சாற்றை தினமும் குடிப்பதனால் செல்கள் புத்துணர்வு பெரும். சுருக்கங்கள் இல்லாமல் தோல் பொலிவு பெறும்.

👉இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கும். மேலும், ரத்தம் உறைந்து போவதை தடுக்கும்.

👉சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகளை குணப்படுத்தும்.

👉வைட்டமின் ஏ அதிகம் இருப்பதனால் கண் குறைபாடுகளை குணப்படுத்தும்.

👉கால்சியமும், பொட்டாசியமும் எலும்புகளை வலுவடைய செய்யும். பல் சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்தும்.

👉முடி கொட்டுதல், இளநரை, பொடுகு போன்ற தலை சம்பந்தமான பிரச்சனைகளையும் குணப்படுத்தும். நெல்லிச்சாறு மஞ்சள் காமாலையை முற்றிலுமாக குணப்படுத்துகிறது.

👉பித்தப்பையில் ஏற்படும் கற்களை கரைக்க நெல்லிச்சாறு ஒரு சிறந்த மருந்தாகிறது.

👉வயிற்று கோளாறுகளுக்கு, புண்களுக்கு நெல்லி ஒரு சிறந்த நிவாரணி. உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது.

👉ரத்தக்குழாய்களில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்கிறது. எனவே, புற்றுநோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து.

👉கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் ஏற்றது. முக்கியமாக மகப்பேறு காலங்களில் உதவுகிறது

குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!

குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!

குளிர்காலம் வந்துவிட்டாலே வீட்டில் உள்ள ஒருவருக்காவது குளிர் ஜுரம் வந்துவிடும். காரணம் குளிர்காலத்தில் நுண்கிருமிகள் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதை எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்புச் சக்தி நம் உடலில் இல்லையென்றால் உடனே நோய்த்தாக்குதல் உண்டாகும்.

நோய் உண்டாக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலை நம் உடலுக்குத் தருவது ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ் எனப்படும் உயிர் வலியேற்ற எதிர்பொருள்தான். வைட்டமின் சி, வைட்டமின் இ, செலீனியம், பீட்டா கரோட்டீன் போன்ற சத்துப்பொருள்களை உள்ளடக்கியதே ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ்.

இந்த சத்துக்கள் அடங்கிய உணவுப்பொருட்களை உண்பதன் மூலம் நம் உடலின் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.

 இனி இந்தச் சத்துப் பொருட்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன என பார்ப்போமா

வைட்டமின் சி
------------------------
சிட்ரஸ் பழங்கள் என அழைக்கப்படும் எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அடுத்து ஸ்ட்ராபெர்ரி பழங்கள், முளைக்கட்டிய பயறு, பச்சை மற்றும் சிவப்பு மிளகு இவற்றிலும் வைட்டமின் சி உள்ளது.
வைட்டமின் இ
சூரியகாந்தி விதை, சோயா பீன்ஸ் இவற்றில் வைட்டமின் இ அதிகம் உள்ளது.

செலீனியம்
--------------------
நம் உடலுக்குத் தேவைப்படும் தனிம சத்து இது. மீன், இறைச்சி இவற்றில் செலீனியம் உள்ளது. தானியங்களிலும் செலீனியம் உள்ளது. மண்ணுக்கு அடியில் அதிக காலம் உள்ள கிழங்கு வகைகளிலும் செலீனியம் உள்ளது.

பீட்டா கரோட்டீன்
----------------------------

நிறமிக்க காய்கறிகளில் பீட்டா கரோட்டீன் கொட்டிக்கிடக்கிறது. உதாரணத்துக்கு பீட்ரூட், கேரட், சிவப்பு முள்ளங்கி, வள்ளிக்கிழங்கு, மாம்பழம், ஆப்ரிகாட் இவற்றில் அதிகம் உள்ளது.

இந்தச் சத்துள்ள உணவுகளை தவறாமல் சேர்த்துக்கொண்டால் உடலின் எதிர்ச்சக்தி பெருகி, குளிர்கால நோய்கள் நம்மைத்தாக்காமல் இருக்கும் குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!

நோய்கள் என்றால் என்ன?

நோய்கள் என்றால் என்ன?🔰

நமது உடலில் இயற்கையாகவே 3
சக்திகள் உள்ளன..

இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல்
இருந்தால்,அந்த செரிமான
சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு
சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% /ஆக
மாறி விடும்....மேலும் நாம்
ஓய்விலிருந்தால் ...இயங்கு
சக்தியின் அளவான 32%...நோய்
எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில்
குணமாகி விடும்.

இப்போ சொலுங்க சாதாரண
காய்ச்சலுக்கெல்லாம் ஆண்டிபயாடிக் வேணுமா?

நமது உடலில் தேங்கும் கழிவுகள்
மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்து விடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த
செயல்முறையின்போது (Process)
நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.

எதனால் சுவாசப் பாதையில்
நோய்கள் ஏற்படுகின்றன?
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல்
மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச்செயல்முறை நிகழும் போது நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.

இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.
இவற்றை நாம் வியாதி என புரிந்துக் கொள்ளும் போது, ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும்
சுரப்பியை வேலை செய்ய விடாமல்
தடுத்துவிடுகிறோம்.
இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /
கிருமிகள் நம் சுவாசப்பாதையில்
தங்கிவிடுகிறது.
இந்த சூழ்நிலையில் நமது உடலில்
சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி,
நிணநீர்
(Lympathic Fluid) மூலம் நமது
சுவாசப்பாதையில் தேங்கிய
கழிவுகள்
மற்றும் கிருமிகளை
வெளியேற்றும் வேலையில்
ஈடுபடும். இந்த
செயல்முறையின் போதுதான்
நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running
Nose)
ஏற்படும். இதையும் வியாதி என
புரிந்துகொள்ளும் நாம் அவற்றை
தடுக்க மருந்துக்களை
உட்கொள்கிறோம்.

இதனால் தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும்
கிருமிகளை வெளியேற்ற சுரந்த
நிணநீர்
(Lympathic Fluid) நமது முகத்திற்குள்
தேங்குகிறது.

இவற்றை தான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும். இந்த
நீரைத்தான் பலர் கண்களில் நீர்
தானாகவே வடிகிறது என
கூறுவார்கள்.
பல காலமாக தேங்கிய இந்த நீரானது
திட வடிவமாக (Solid) மாறுகிறது.
இதைத்
தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis
(Sinus Infection) என்று அழைக்கிறோம்.

இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க
நமது உடலானது காய்ச்சல்
செயல்முறையை நிகழ்த்தும். நாம்
காய்ச்சலையும் வியாதி எனக்
கருதி
அதையும் தடுக்கவும்
மருந்துக்களை உட்கொள்கிறோம்
என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.

நமது சுவாசப்பாதையில் தேங்கிய
கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid)
மூலம் வெளியேற்ற
முடியாதபோது நமது உடல்
சளியின் (Mucus) மூலம்
வெளியேற்ற முயற்சி செய்யும்.
இந்த சளியானது நமது நுரையீரல்
மற்றும் சுவாசப்பாதையில் உள்ள
கழிவுகளை அதனோடு சேர்த்துக்
கொண்டு நமது மூக்கின் மூலம்
வெளியேறிவிடும். இந்த
சளியையும்
நாம் வியாதி எனக் கருதி
மருந்துக்களை உட்கொண்டு
தடுத்துவிடுகிறோம். அந்த
மருந்துகள் சளியை கட்டியாக
மாற்றி நமது
தொண்டையில் படியச்செய்யும்.
அவ்வாறு படியும் கழிவுகள் தான்
நமக்கு வறட்டு இருமல் மற்றும்
குறட்டை ஏற்பட அடிப்படை
காரணங்கள்.

வறட்டு இருமலுக்கு நாம் சிரப்
(Syrup) வடிவில் மருந்துக்களை
உட்கொள்ளுவோம். அப்போது நமது
தொண்டையில் படிந்த காய்ந்த
சளியானது கொஞ்சம் கொஞ்சமாக
கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்துவிடும். இவ்வாறு நமது
நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம்
தடைபடும்.

இந்த நிலையை தான்
மூச்சிறைப்பு (Short Breath / Wheezing)
என்று
அழைக்கிறோம்.
இதுவே பெருவாரியான
சிற்றறைகளில்
அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் மிகக்
குறைந்த அளவே இருக்கும்.
அப்போது இந்த மூச்சிறைப்பு
அடிக்கடி
ஏற்படும். இந்த நிலையை தான்
ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.
பொதுவாக நாம் ஓடும்போது நம்
உடலுக்கு நிறைய பிராணவாயு
தேவைப்படும். அப்போது நாம்
சுவாசம் முழுமையாக இல்லாமல்
வேகமாக இருக்கும். இந்த
நிலையில் குறைவான நேரத்தில்
அதிக மூச்சுக் காற்றை
சுவாசிப்போம் அது தான்
மூச்சிறைப்பு. நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது
உடலுக்கு அதிகமாக காற்றோட்டம்
தேவைப்படும் நேரங்களில்
குறைவான சிற்றறைகள்
மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில்
இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.
பெரும்பகுதியான சிற்றறைகள்
கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு
அடிப்படை காரணம். இதை தான்
கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றல் குணம்
என்று கூறுகிறோம்.

இப்போதும் ஒருவருக்கு ஏன்
ஆஸ்துமா (Asthma) நிலை
ஏற்பட்டுள்ளது
என்பதை அறியாமல் ஸ்டீராய்டு
(Steroid) மருந்துக்களை கொண்டு
இன்ஹேலர் (Inhaler) மற்றும்
நேபுளேசர் (Nebulizer) வடிவில்
தற்காலிக நிவாரணம்
பெறுகிறோம். பல காலமாக
தேங்கிய இத்தகைய கழிவுகள்
திட வடிவம் (Solid State) பெறுகிறது.
இப்போதும் காய்ச்சல் மூலம்
இவற்றை
கரைக்க நமது உடலானது முயற்சி
செய்யும், நாம் இந்த முறையும்
காய்ச்சலை வியாதி எனக் கருதி.
மருத்துகளை உட்கொண்டு அவற்றை
தடுத்துவிடுகிறோம்.

பின்னர் தேங்கிய திடக்
கழிவுகளுக்கு காசநோய்
(T.B Tuberculosis) என பெயர்
சூட்டுகிறோம். பின்னர். இதற்கும்
நாம் மருந்துக்களை
உட்கொள்கிறோம். அந்த திடக்
கழிவுகளை
கரைக்க முயற்சி
மேற்கொள்ளும்போது வலி
ஏற்படும். நமது நுரையீரலில்
வலி ஏற்படுகிறது என்று
பரிசோதனை மேற்கொள்
வோம். அப்போதுபயாஸ்பி (Biospy)
எடுத்து புற்றுநோயா (Cancer) என
சோதிப்பார்கள். Biospy
என்றால் அந்த திடக்கழிவில் இருந்து
மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா
என சரிபார்ப்பார்கள்.
கழிவின் தேக்கத்தில், எங்கு
இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே
இதை புற்றுநோய்
கட்டி என்று கூறிவிடுவர்.
இது தான் நுரையீரல் புற்றுநோய்
(Lungs
Cancer) என்று அழைகப்படுகிறது.

எனவே நமது உடலின் அடிப்படை
இயக்கத்தை புரிந்துகொள்வதே
ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
"நம் கையில் இருக்கும் ஒரு
பொருளை உலகில் வேறு
எங்குதேடினாலும் கிடைக்காது"
ஏனென்றால் அந்த பொருள்
இருக்கும்
இடத்தை விட்டுவிட்டு இல்லாத
இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக
இன்றைய தினத்தில் நாம் நமது
ஆரோக்கியத்தை
மருத்துவமனைகளில்
தேடுகிறோம்.

நம் சுவாச பாதையில் தேங்கும்
கழிவுகளை நம் உடம்பானது
எவ்வாறு
வெளியேற்றும்?

# தும்மல்,
# மூக்கு ஒழுகுதல்,
# சளி,
# இருமல்
# காய்ச்சல் மூலமாக
வெளியேற்றும்.

இவற்றை நாம் வியாதி என கருதி
அதை தடுக்க முயற்சிக்கும்போ
ததான் இந்த கழிவுகள் தேங்கி
இருக்கும் இடத்திலேயே நமது
உடலால் கட்டியாக்கப்படும். பிறகு
நமது உடலின் எதிர்ப்புசக்தி
அதிகரிக்கும்போது காய்ச்சல்
என்கிற செயல்முறையின் மூலம்
வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த
கட்டிகளை மற்றும் நமது உடலில்
தேங்கிய இதர கழிவுகளையும்
எரித்துவிடும்.

காய்ச்சலை ஏற்படுத்த போதுமான
சக்தி இல்லாதபோது நமது உடலின்
எஞ்சிய சக்தியை கொண்டு
கழிவுகளை வெளியேற்ற
முயற்சிக்கும்போது அந்த இடத்தில்
வலி ஏற்படும். சிலநேரம் நமது
எதிர்ப்பு சக்தி போதுமான அளவில்
இல்லையென்றால் நமது உடலின்
இயக்க சக்தி
தேவைப்படும். அப்போதுதான்
தலைவலி ஏற்படும். தலைவலி
ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும்
செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்.
அதற்குதான்
தலைவலி ஏற்படுகிறது.

யாரெல்லாம் தலைவலி வந்தால்
மருந்துகளின்றி ஓய்வு
எடுக்கிறார்களோ அவர்களுக்கு
ஒருபோதும் புற்றுநோய்
வருவதில்லை.

யாரெல்லாம் காய்ச்சலுக்கு
மருந்துகளின்றி மற்றும்
பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே
எடுக்கிறார்களோ அவர்களுக்கு
Typoid,
Jaundice, Chicken Guniya, Coma
(விபத்துக்களால் ஏற்ப்படும் Coma
அல்ல),
புற்றுநோய் (Cancer), ரத்த
புற்றுநோய் (Blood Cancer) போன்ற
தொந்தரவுகள்
ஏற்படுவதில்லை.

இவ்வாறு நமது உடலின் கழிவு
வெளியேற்றத்துக்கு நாமே
தடையாக
இருந்துவிட்டு வியாதிகள்
பெருகிவிட்டது என கூறுகிறோம்.

நமது உடலின் அடிப்படையை
கற்றுக்கொண்டு மருந்துகளின்றி
ஆரோக்கியமாக வாழ்வோம்.

மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..

மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..

குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.

குறிப்பு 1 :

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

குறிப்பு 2

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு 3 ;

ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

குறிப்பு-4 :

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

குறிப்பு- 5 :

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு- 6 :

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

குறிப்பு- 7 :

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்

உணவுச் சிந்தனை முத்துக்கள்...

உணவுச் சிந்தனை முத்துக்கள்...

1). அழகு முகத்திற்கு நட்புணவு ஆரஞ்சும் ஆப்பிளும்.

2). கண்களின் நட்புணவு காரட்டும், கறிவேப்பிலையும்.

3). காலை காபி நரம்புகளுக்குக் கெடுதி

4). பளபள மேனிக்கு பப்பாளி

5). வெந்து கெட்டது முருங்கை - வேகாமல் கெட்டது அகத்தி.

6). ஈரெட்டு வயதை நீட்டிக்கும்  குமரி, நெல்லி.

7). சளி, இருமலை அதிகரிக்கும் மாட்டுப்பால்

8). உப்பும், வெள்ளை சர்க்கரை ஆரோக்கியத்தின் எதிரிகள்

9). உடல் உறுதிக்கு தேங்காய்ப்பால்

10). தங்கமேனிக்கு ஆவாரம்பூ

11). வயிற்றுக்கு மாதுளை, நெஞ்சுக்கு தூதுவளை

12). சமைத்த உணவு தவறான உணவு

13). மலச்சிக்கலுக்கு மாம்பழம், மாலைக்கண்ணை விரட்டும்.

14). ஆஸ்துமாவிற்கு எதிரி ஆரஞ்சும், அன்னாசியும்.

15). நாவல், நெல்லி கூட்டணி நீரிழிவை விரட்டிடும்.

16). பசிக்காத உணவு குப்பை உணவே.

17). பசிக்காமல் புசிப்பவன் மனிதன் மட்டுமே.

18). நோய்களின் தாய் சமைத்த அமில உணவுகளே

19). வசம்பு நமது மூலிகைத்தாய் -  கடுக்காய் நமது இரண்டாவது தாய்.

20). தரையில் தவழும் தலக்கீரைச் செடிகள் காலனை விரட்டும்.

21). நின்று கொண்டு நீர் அருந்தக் கூடாது.

22). அசையாத பருமன் உடலும் நெல்லியால் நடக்கும் - ஆப்பிளால் ஆடும் - பப்பாளியால் ஓடும்.

23). தக்காளியால் குண்டு அன்பர்கள் கட்டழகு பெறலாம்.

24). பாலும் சமைத்த கீரையும் நஞ்சு - தேனும் நெய்யும் சம அளவு நஞ்சு.

25). தேனும் முட்டையும் நஞ்சு - தேனும் சீனியும் சம அளவு நஞ்சு.

26). முள்ளங்கியும் உளுந்தும் நஞ்சு - மீனும் பாலும் நஞ்சு

27). மணத்தக்காளியும் மிளகும் நஞ்சு - தயிரும் வெங்கலப் பாத்திரமும் நஞ்சு

28). தொப்பைக்கு எதிரி தக்காளி, தர்பூசணி.

29). வயிற்றின் நட்புணவுகள் வெள்ளரியும் வெந்தயமும்.

30). முதுகு தண்டுக்கு முருங்கை, பப்பாளி.

31). அமிர்த உணவுகள் தேங்காய், மாதுளை.

32). நெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, வெந்தயம் உண்பவர்கள் தனக்குத்தானே மருத்துவர்.

33). வாரம் ஒருநாள் இயற்கைச்சாறுகள், மாதம் இரண்டு நாட்கள் நோன்பு - உங்கள் ஆயுளை பத்து வருடம் நீடிக்கும்.

34). அளவுக்கு மீறினால் உணவே நஞ்சு.

35). தினசரி ஒரு பிடி கரிசாலை நரை திரை மாறும்

36). தோல் வியாதிகளுக்கு நண்பன் கத்தரிக்காய்.

37). இரத்த விருத்திக்கு செம்பருத்தி - மூட்டுவலிக்கு முடக்கற்றான்.

38). குடற்புழுக்களுக்கு வேப்பங்கொழுந்து - சளிக்கு கற்பூரவல்லி.

39). கொழும்புக்கு எதிரி வெங்காயம், இஞ்சி, பூண்டு.

40). இரத்த அழுத்தத்திற்கு மிளகு, வெந்தயம்.

41). கல்லடைப்புக்கு வாழைத்தண்டு - வரட்டு இருமலுக்கு உலர்ந்த திராட்சை.

42). நினைவாற்றலுக்கு வல்லாரை - சித்தம் தெளிவிற்கு மஹா வில்வம்

43). மூளைக்கு வாழைப்பழம், வல்லாரை, பேரீட்சை, உலர் திராட்சை மற்றும் வெண்டைக்காய்.

44). பைத்தியம் தெளிய வெண்பூசணி, பேய்ச்சுரக்காய்

45). வெட்டுக்காயத்திற்கு வசம்பு, தேன்.

46). புற்றுநோயை தடுக்கும் மஞ்சள், வெண்பூசணி, சீத்தாப்பழம், கோதுமைப்புல் சாறு

47). மூலநோய்க்கு அத்திக்காய், கருணைக்கிழங்கு

48). தலைப்பேனுக்கு மலைவேம்பு - உடல் காய்ச்சலுக்கு நிலவேம்பு.

49). தாய்ப்பால் பெருக பூண்டு, வெந்தயம், முருங்கை

50). சொரி, சிரங்குக்கு வேப்பிலை, மஞ்சள், குப்பைமேனி.

51). குஷ்ட நோய்க்கு வேப்பம்பிசின் - புற்றுநோய்க்கு வேப்பிலை.

52). வயிற்று புண்ணுக்கு மணத்தக்காளி - பல்வலிக்கு பப்பாளி

53). சுகப்பிரசவத்திற்கு குங்குமப்பூ, தேன், பிரண்டை

54). சர்க்கரை ரோய்க்கு பாகற்காய்- சிறுநீரகத்துக்கு சிறுகீரை

55). சிற்றின்பத்துக்கு சிறுபசலை - தாது விருத்திக்கு முருங்கை

56). குடற்புழுக்களுக்கு பாகற்காய், வேப்பிலை, சுண்டைக்காய், கடுக்காய்.

57). பித்த வெடிப்புக்கு வேப்பெண்ணெய் + மஞ்சள், விளக்கெண்ணெய் + சுண்ணாம்பு

58). நெஞ்சு சளிக்கு சுண்டைக்காய் - நரைமுடிக்கு தாமரைப்பூ

59). வயிற்று கடுப்புக்கு கேழ்வரகு மாவு + சர்க்கரை

60). உடல் அசதிக்கு கோதுமை மாவுக் கஞ்சி

61). பிள்ளை பெற்றவளுக்கு அரைகீரை - உட்புண்களுக்கு கடுக்காய்

62). வாய்ப்புண்ணுக்கு கொய்யா இலை - வயிற்றுப்புண்ணுக்கு மணத்தக்காளி இலை

63). திக்குவாய்க்கு வில்வம் - நாக்குப் புண்ணுக்கு பப்பாளிப்பால்

64). குதிகால் வலிக்கு  எருக்கு - இரத்த விருத்திக்கு அருகு

65). சளிக்கு துளசி - பித்தத்திற்கு வில்வம்

66). மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி - நரம்புகளுக்கு வல்லாரை

67). புரையோடிய புண்ணுக்கு அத்திப்பால், கருவேலங் கொழுந்து

68). அகத்தின் தீயை அணைக்கும் அகத்தி

69). சர்க்கரை நோய்க்கு ஆவாரம்பூ, பாகற்காய்

70). விஷப் பூச்சி, ஜந்துக்களின் விஷமுறிவுக்கு சிறியாநங்கை

Friday 2 November 2018

சளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்!

சளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்!

சளித்தொல்லை என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவரையும் விட்டு வைப்பது இல்லை.

உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளாக வெளியேறுகிறதோ அதைபோலத்தான் சளியும் ஒரு கழிவுப்பொருளாகும்.

ஆனால் சளி வந்தவுடன் நாம் அதனை வெளியேற்ற நினைக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு உள்ளேயே வைக்கின்றோம்.

இத்தகைய சளித் தொல்லையில் இருந்து எளிதில் விடுபட உதவும் சில எளிய இயற்கை வழிகளைப் பற்றி பார்ப்போம்.

பூண்டு

சளி பிடித்திருக்கும் போது பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம்.

2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.

தேங்காய் எண்ணெய்

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலை போக்க ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெயை மார்பு மீதும், முதுகுபுறமும் தடவினால் சளி, இருமல் குறையும்.



முள்ளங்கி

சளி பிடித்தவர்களுக்கு முள்ளங்கி மிகவும் நல்லது. இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும், ஆன்டி-செப்டிக் பண்புகளும் ஏராளமாக உள்ளது.

ஏலக்காய் பொடி

1 தேக்கரண்டி ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து சாப்பிட மார்புச் சளி நீங்கும். மேலும் வல்லாரை சூரணத்தை தேன் கலந்து சாப்பிட்டு வர சளி இருமல் நீங்கும்.

வெங்காயம் மற்றும் தேன்

சிறு வெங்காயம் சாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவாக கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட வேண்டும். இரு தினங்களில் சளி நீங்கும்.

ஆவி பிடித்தல்

தீராத சளியினால் அவதிப்படுபவர்கள் ஆவி பிடித்தல் சளி இளகி, வெளியேற ஆரம்பித்து, மூக்கடைப்பில் இருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சி டீ

சளியை உடலில் இருந்து உடனடியாக வெளியேற்ற இஞ்சி டீ, மஞ்சள் பால் அல்லது சுடுநீர் போன்ற பானங்களை குடிக்கலாம்.

சுடுநீரில் உப்பு

சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும்போது சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு சுடுநீரில் உப்புக் கலந்துதொட்டுத் துடைத்தால் மூக்கடைப்பு நீங்கும்.


ஹனி அமானிய்யா இயற்கை சித்த மருத்துவர் .க. அலாவுதீன். தூத்துக்குடி மாவட்டம்
8056924288_*


டெங்குவை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்!

டெங்குவை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்!

சேலம் டாக்டர். அழகு அவர்கள் டெங்குவில் இருந்து விடுபட ஐந்து விதமான இலைகளை சேர்த்து பருகிவந்தால் டெங்குவில் இருந்து விடுபடலாம் !

1. வெற்றிலை 10 இலைகள். 
2. புதினா கீரை கைப்பிடி அளவு.
3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு.
4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு.
5. வாழைத்தண்டு 100 கிராம்.
இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின் வடிகட்டி, பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில் விரட்டி விடலாம் !

புற்றுநோயிற் கான மருந்து

இரத்தப் புற்றுநோய்
மூளைப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்
பெருங்குடல் புற்றுநோய்
கல்லீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய்
புரோஸ்டேட் புற்றுநோய்
கருப்பை புற்றுநோய்

அன்பிற்குறிய நண்பர்களே மேற்கூரிய
பல புற்றுநோயிற் கான
மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது 
கர் கூமினோயிட்ஸ்" என்னும் மருந்து பலவித புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தாகும்
இது பெங்களூரில் உள்ள புற்றுநோய் மூலிகை மருத்துவ மனையில் நியாயமான விலையில் கிடைக்கும், அனைவருக்கும் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும் இதனால் இச்செய்தி யாருக்காவது உதவலாம் எனவே கருனை கூர்ந்து Forward செய்யவும்

கேன்சர் ஹெர்பலிஸ்ட்
பெங்களுர்
முகவரி - 6, டி வி ஜி சாலை காந்தி பஜார்
பசவன குடி
பெங்களுர் - 560004
லேன்ட் மார்க் - வித்யார்தா பவன் ஹோட்டல் அருகில்
தொலைபேசி - 080 - 412 18877
080 - 266011 27
8884588835
Cancer herbalist@mail.com

காலில் இரத்த குழாய் அடைப்பு பாதம் முதல் அடி வயரு வரை மருத்துவ தீர்வு


காலில் இரத்த குழாய் அடைப்பு ஏற்படுள்ளது பாதம் முதல் அடி வயரு வரை மருத்துவ தீர்வு 









சிறுநீரக கல்லை கரைக்கும் அற்புத மருந்து

டாக்டர்களே வியந்த சிறுநீரக கல்லை கரைக்கும் அற்புத மருந்து பற்றிய பதிவு

கோவையில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் பொழுது இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி.

கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று நான் தங்கியிருந்த வீட்டின் மாடிப்படியில் உட்கார்ந்திருந்தேன்.

பக்கத்து வீட்டுப்பாட்டி சலம் கழிக்க வந்தார். ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன்.

உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார்.

“இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்” என்று கொடுத்தார்.

கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது.

மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார்.

நான் மாத்திரை வாங்கவே இல்லை. பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது.

தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன்.

வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது.

மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். சிறுநீரகக் கல் இல்லாமல் போனது.பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன்.

அதிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.



பிறகு தான் தோன்றியது. காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத்தான் என்று.

குக்கர் என்கின்ற விஷம்!.

குக்கர் என்கின்ற விஷம்!.


🔴 சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.

🔴 எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.
சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்"

🔴 இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம்.

🔴 இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.

🔴 உதாரணம் – ப்ரஷர் குக்கர்
இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது
எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.

🔴 இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது.

🔴 இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய போராளிகளை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

🔴  ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது.
பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.

🔴 உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும்.

🔴  அதனால்தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும்.
மிருதுவானால் போதாது.

🔴  சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.
மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%
சில்வர் - 90%

🔴 இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான் இருக்கும்.

🔴  இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம்
சர்க்கரை வியாதி,
முழங்கால் வலி,
விரைவில் முதுமை,
மற்றும் இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்

🔴 எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.

🔴 இதைப் போன்றே ரெஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற காற்று, ஒளிபடாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.

🔴 Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பழமைக்கு_மாறுவோம்!
ஆரோக்கியமாக_வாழ்வோம்!!
நோய்கள்_இல்லாத..
அடுத்த_தலைமுறைக்கு..
வித்திடுவோம்!!. 👍

Murngai Kai




















சித்த மருத்துவத்தில் சீரகத்தின் பயன்கள்.

சித்த மருத்துவத்தில் சீரகத்தின் பயன்கள்...!🌐⛔



✷ சீரகம் மருத்துவ குணம் நிறைந்தவை.
சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு  சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.


✷ சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து,  சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.


✷ சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.


✷ சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.


✷ சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே,  வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.


✷ உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.


✷ திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த  அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்🔵🔴

புளியின் மருத்துவப் பயன்கள்

 
      ⭕புளியின்
       மருத்துவப் பயன்கள்⭕




     ◼🔸● புளியை நீரில்
      கரைத்து அதனுடன்
      உப்பு சேர்த்து கொதிக்க
      வைத்து இளம் சூட்டில்
      பற்றுபோட்டால் ரத்தக்
      கட்டுகள் கரையும்.

      ● புளித் தண்ணீரை
      கொப்பளித்தால்
      வாய்ப்புண்கள்
      குறையும்.

      ● புளியுடன்
      சுண்ணாம்பு கலந்து
      குழப்பி சூட்டோடு தேள்
      கொட்டிய இடத்தில்
      போட, தேள் விஷம்
      இறங்கும்..........🌴🌲🔳     

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.
• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.
• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.
• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எளிய இயற்கை வைத்தியம்
1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
47. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.
50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.
52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.
54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

Saturday 20 October 2018

தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?

தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?

உடலும் மனமும் திடமாக இருப்பதே உண்மையான அழகு. நம் முன்னோர்கள், ஒரு தாய் கருவுற்றிருக்கும் போதே சிசுவிற்கான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியிருக்கின்றனர். வியப்பில் ஆழ்த்தும் எண்ணற்ற அஞ்சறைப் பெட்டிப் பொருள்களை நாட்டு வைத்தியமாகக் கடைபிடித்திருக்கின்றனர். அதிலும் பெண் குழந்தைகள் என்று கருதினால் அழகிற்கும் நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னெச்சரிக்கையாக கை வைத்தியங்கள் செய்திருக்கின்றனர். பெண் தாய்மையடைந்த நேரத்தில் மருந்து கொடுப்பது தொடங்கி, சாத்திரங்கள், சடங்குகள் எனப் பல்வேறு முறைகளாக வைத்திருந்தனர். அவற்றை மூடநம்பிக்கைகள் எனப் புறக்கணித்தாலும் அதற்குள் இருக்கும் மருத்துவ உண்மைகளை நாம் மறுப்பதற்கில்லை.

குழந்தை பிறந்த சில நாள்களில் காய்ந்து விழுந்த தொப்புள் கொடியைத் தாயத்தில் வைத்து கழுத்தில் அணிவித்திருக்கிறார்கள். ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து, மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் ஆபத்தான காலகட்டத்தில் உபயோகப்படுத்துவதற்கான பல்வேறு ஆராய்ச்சிகள் இன்று உலக அளவில் நடக்கின்றன. இதை நம் மூத்தகுடிகள் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்
இன்றைக்கும் கிராமங்களில் கடுக்காய், வசம்பு இவற்றைக் கொண்ட காப்பினை கைகளில் அணிகின்றனர். செரிமானக் கோளாறு, சுறுசுறுப்பின்மையால் மந்தமாக இருக்கும் குழந்தைகளுக்கு உரைத்து பாலாடையில் கொடுக்கின்றனர். ஒட்டுமொத்தமாக நாம் மறந்துபோன ஒரு மரப்பாச்சி பொம்மை. மருத்துவக் குணம் கொண்ட சந்தனம், செம்மரம், ஈட்டி மரத்தினால் செய்யப்படுவது. குழந்தைகள் கடித்து விளையாடினாலும் தோல்களில் பட்டாலும் சந்தனத்தின் தன்மையால் தோல் அழற்சி, சிறு சிறு வேனல் கட்டிகள் நீங்கும் எனக் கூறுகின்றனர். உடல் சூட்டைத் தணிக்க காப்பரினால் ஆன காப்பு அணிவதும், இயற்கையாக வீட்டிலேயே செய்த கண்மையினை விளக்கெண்ணெய் கலந்து கண்கள், கன்னங்கள், பாதங்களில் இட்டிருக்கின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக பச்சைப்பயிறு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர்  கலந்த நலங்கு மாவு வீட்டிலேயே தயார் செய்யப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் முறையற்ற துரித உணவுகளாலும், பரபரப்பான வாழ்க்கை சூழல் மற்றும் மனஉளைச்சலாலும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் பெருகிவிட்டன. குறிப்பாக நீர்க்கட்டிகள் (PCOS). இதனால் முகம் முழுவதும் பருக்களும், கருப்புத் திட்டுகளும் உருவாகின்றன. மீசை போல முடிகள் அதிகம் வளர்வதும் நிகழ்கிறது. இன்று எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் வந்து விட்டன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது எண்ணப்பாட்டிற்காக மட்டும் சொல்லிச் செல்லவில்லை. உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்குள் ஏற்பட்டிருக்கும் தீங்கினை வெளிக்காட்டும் முதல் அறிகுறியாக செயல்படுவது தோல்.  அடிப்படை சிகிச்சை பெறாமல் இறக்குமதி செய்யப்பட்ட பவுடர்களால் மறைத்து அழகாக காட்டிக் கொள்வது ஆபத்தானது.  இதைப்பற்றி சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மிஷா பெப்சி விரிவாகப் பேசுகிறார்.

நவீன உலகில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அவைகளை எதிர்த்துப் போராடுவதிலேயே தங்களைப் பற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. இயற்கையான காய்கறிகள், பழங்கள், தானியவகைகள் இவற்றோடு உடற்பயிற்சியும்  உடல் சுத்தமும் பேணிக்காத்தால் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கலாம். பொதுவாகவே பெண்கள் பூப்படைந்தபின் மாதவிலக்கில் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இரும்புச் சத்து மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் உதிரப்போக்குகள் ஏற்படக்கூடும். அதற்கு வெல்லம், பேரீச்சம்பழம், மாதுளம்பழம்  போன்றவற்றை உண்ண வேண்டும். ஆட்டு ஈரல் போன்ற இறைச்சி வகைகளும் நலம் பயக்கும்.

சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தாலோ, முகத்தில் அழுக்கு சேர்ந்தாலோ ஹார்மோன்  சுரப்பிகள் சரியான அளவில் சுரக்காமல் இருந்தாலோ முகத்தில் நிறைய பருக்கள் வர வாய்ப்புள்ளன. வெள்ளைப்படுதல், புற்றுநோய், நோய்த்தொற்று, உடல்பருமன், வயிற்று வலி, முடிகொட்டுதல் எனப் பெண்கள் அவதிப்படுகின்றனர். ஒருபுறம், பெரும் வளர்ச்சி கண்ட உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் புதிது புதிகாக நோய்கள் உருவாகின்றன. மறுபுறம், அதற்கான தடுப்புமுறை ஆராய்ச்சிகள் பல்கிப் பெருகுகின்றன. நோய் வராமல் காப்பதும், நோய் வந்தபின் தகுந்த சிகிச்சை மூலம் உடலைப் பேணிக்காப்பதுமே சிறந்தது எனக் கூறினார்.

சமீபத்திய நோய்களின் பெருக்கம் அச்சமாகத்தான் இருக்கிறது. அன்றைக்கு, ஒரு பெண் பூப்படைந்தால், கருமுட்டை வளர்ச்சிக்கும், இடுப்பு எலும்பின் வலுவுக்கும் நல்லது என வீட்டுப் பெரியவர்கள் முளைக் கீரை விதைகளை உண்ணக் கொடுத்தனர், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயில் நாட்டுக் கோழி முட்டை கலந்தும், தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்தில் நல்லெண்ணெய் குழைத்தும் கழி செய்து கொடுத்தனர்.

பூப்பு நீராட்டுவிழாவாக கிருமி நாசினியான மஞ்சள், வேப்பிலை கலந்த நீரில் விழா எடுக்கப்பட்டது. வளைகாப்பிற்கான ஏழு வகை சோறும், சடங்கு நாள் அன்றைக்கான பருப்பு சோறும், தாய்மாமன் வீட்டு புட்டும் செய்வதற்கான பொருட்களெல்லாம் இன்றும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன.அதன் மகத்துவம் அறியாமல் நாம்தான் அலுப்புடன் அலட்சியப்படுத்துகிறோம். சிந்தித்துப் பார்த்தால், பாரம்பரியம் நிறைந்த நம் மண்பானை வாழ்வியலில், அளப்பரிய பெரும் மருத்துவ உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நாகரிகம் என்ற பெயரில் எல்லாவற்றையும் தொலைத்து, ரசாயனங்களுக்கு அடிமையாகிவிட்டோம்.

இப்போதொன்றும் காலம் கடந்து விடவில்லை. எழுதப்படாத நம் மூதாதையரின் அறிவியல் அறிவை, பெண்களாகிய நாம் நடைமுறையில் மீட்டெடுக்க மீள் முயற்சி செய்ய வேண்டும். ஆரோக்கிய வாழ்க்கையை சாத்தியப்படுத்த வேண்டும்.

"டாக்டர்கள் தேவையில்லை"

"டாக்டர்கள் தேவையில்லை"

சீராக பராமரிக்கக்கூடிய உடலைக் கொண்டே சிறந்த ஆரோக்கியம் பெற முடியும். அதன் மூலம் தான் அருமையான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இது தானே புத்திசாலித்தனம்..!!

கட்டுப்பாடு இல்லாத உணவு வகைகளை உண்டு, நம் அருமையான உடலை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் இருந்து தப்பிக்க முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறது மனிதஇனம். பேணிப் பராமரிக்கக்கூடிய மனிதனின் வயிறு, இப்போது குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது. இதிலிருந்து மீண்டும் அழகான உடலையும், நல்ல ஆரோக்கியத்தையும், சிறப்பான வாழ்க்கையையும் பெறவே, இந்த சில அருமையான வழிகள்

1. ஆரோக்கிய உணவு

நம் முன்னோர் கூறியபடி Eat breakfast like a king, lunch like a prince and dinner like a pauper என்பதைப் பின்பற்றுங்கள். அனைத்து வகை தானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, கோழி, மீன் என அனைத்தும் கலந்த சரிவிகித உணவு (Balanced Diet) எடுத்துக்கொள்வது அவசியம். அதிக அளவு அரிசி, மைதா வேண்டாம். சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகள், எண்ணெயில் வறுத்தெடுத்த பண்டங்கள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை குறைப்பது அல்லது சேர்க்காமலே இருப்பது நல்லது. 3 வேளை மூக்குப்பிடிக்கச் சாப்பிடுபவராக இருப்பின், அதையே 5 வேளைகளுக்கு சிறிது சிறிதாக சாப்பிடக் கற்றுக் கொள்வது ஆரோக்கியத்துக்கு உத்தமம்.

2. உடற்பயிற்சிக் கூடம்

வீட்டுக்கு அருகாமையில் உள்ள நல்ல உடற்பயிற்சிக் கூடத்தில் உடனடியாகச் சேருங்கள். குறைந்தது தினமும் 45 நிமிடங்கள், வாரம் 4 நாட்கள் பயிற்சி மேற்கொள்வதால் அதிக கொழுப்பை நீக்கலாம். அதோடு, தேவைக்கு அதிகமாக உடலில் தங்கியுள்ள உணவுச் சேர்க்கையை எரித்து (Reduce or Burn Extra Calories) பயன் பெறலாம். பட்டினியாக - ஒரு வேளை அல்லது இரு வேளை சாப்பிடாமல் இருந்து எடை குறைக்க எண்ணுவது மடமையே. தசைகள் வலு விழந்து உங்கள் உடலை மேலும் வாட்டி விடும் (An empty stomach can lead to muscle loss).

3. எலும்புகளுக்கு கால்சியம்

அதிக உழைப்பின் காரணமாக எலும்புகளின் சக்தி குறையத் தொடங்கும். அதனால் மருத்துவர் ஆலோசனையுடன் நேரடியாகவோ, உணவிலோ கால்சியம் எடுத்துக்கொள்வது எலும்புகளின் உறுதிக்கு அவசியம். எலும்புகள் உறுதி இல்லை எனில் தசைகள் வலிமை இழந்து, அவ்வப்போது பல பாகங்களில் தசைப் பிடிப்பு உண்டாகும்.

4. நிறைய தண்ணீர்

உங்களின் எடையை சீராக வைத்துக் கொள்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். இது உடலை சுத்தப்படுத்தும் பணியையும் செய்கிறது.

5. ஆழ்ந்த உறக்கம்

தூக்கமின்மையே இதயம், கிட்னி சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, பருமன், மன அழுத்தம் போன்ற பலவிதமான அபாயகரமான பிரச்னைகளுக்கு மூல காரணம். நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் சிறந்த தியானத்துக்குச் சமமாகும். நல்ல உறக்கத்தால் உடல் உறுப்புகள் ஓய்வு பெறுகின்றன. ரத்த நாளங்கள் அமைதி அடைகின்றன. நீண்ட ஆயுளுக்கும், உடல் உறுதிக்கும் உத்தரவாதம் அளிக்கும் அருமையான டாக்டரே - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்.

இவற்றை முறையாக கடைபிடித்தால் பெரும் மருத்துவமனைகளை வாழவைக்க வேண்டிய அவசியமில்லை. விதவிதமான மருந்துகளும், மருந்துகளின் பல்வேறு பக்கவிளைவுகளும் உங்களை தேடி வராது. நம்மை மருந்துகளால் சோதனைக்கு உட்படுத்தப்படும் மனித உடல்களாய் மட்டுமே பார்க்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறையும்.

ஆரோக்யம் என்பது அனைத்து விதத்திலும் நம் கைகளில்....

Useful Video for generation

























இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!


• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.

• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.

• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.

• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.

• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.

• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.

• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எளிய இயற்கை வைத்தியம்

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horse gram) கொடுக்க வேண்டும்.

13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

47. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.

50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.

52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.

54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

லாபத்துக்காக மருந்துகளை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்கள்,

லாபத்துக்காக மருந்துகளை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்கள், எப்படி மக்களை நடைப்பிணங்களாக மாற்றுகிறார்கள் என்பதை தோலுரித்துள்ளார் டாக்டர் ஜான் ரென்ஜென். 

Pharmaceutical companies that target children -

https://www.vikatan.com/news/health/139934-drug-companies-are-targeting-kids-with-comic.html



https://www.vikatan.com/news/health/139934-drug-companies-are-targeting-kids-with-comic.html

சிறுநீரக_பாதுகாப்பு

சிறுநீரக_பாதுகாப்பு
********
சிறுநீரக பாதிப்பு 90 % இல்லாத மாநிலம் எது?

அதன் காரணம் என்ன?

இந்த வெண்பூசணி மோர்குழம்புதான் அது.

செய்முறை:-

கும்பளங்காய் என்று மலையாலத்திலும், கூஷ்பாண்டம் என்று சம்ஸ்கிரதித்திலும் அழகாக அழைக்கப்படும் வெண்பூசணி காயை முதலில் கொஞ்சம் தண்ணீர்விட்டு வேகவைக்கவும்;
பிறகு தேங்காயுடன் பச்சைமிளகாய், சின்னஜீரகம் சேர்த்து அரைக்கவும். பிறகு வழக்கம்போல் எண்ணெய் கடுகு கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்துத் தாளித்து மல்லி இலை தூவி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகப்பை நன்கு வலுவடையும். உடலின் சூடு தணியும்.

கேரளத்தில் இந்த பூசணிக்காய் மோர் குழம்பு உண்பதால் அந்த மாநிலத்து மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு 90% சதவிகிதம் இல்லை.!

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளிச்செடியை ஏன் பயன்படுத்த தவறினோம்?

எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் சப்பாத்தி கள்ளி பழம். கொஞ்சம் மெனகெட்டாலே போதும். இது நமக்கான உணவு மருத்துவம். செலவில்லாத சிறந்த உணவு மருந்து.



புற்றுநோய் கட்டிகள், கட்டிகள் உடலில் ஏன் உருவாகிறது? நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. டிபன்ஸ் மெக்கானிசம் எனப்படும் உடல் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன நமது உடலுக்குள் நுழையும் நூண்னுயிரிகளை இரத்த அணுக்கள் சண்டையிட்டு அழித்து விடுகின்றது இந்த கழிவுகள் தோலின் வழியாக வெளியேற்ற படுகின்றன. இந்த கழிவுகள் வியர்வை துவாரங்களை அடைத்து உடலில் கட்டிகளை உண்டு பன்னுகிறது.... இந்த கழிவுகள் சிறிது சிறிதாக திரண்டு பெரிதாகி சிவந்து,உடைந்து,சீழாக வெளியேறிய பின்பு புண்ணாக மாறி உடல் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக புண் ஆறி விடுகிறது இது தான் இயற்கையான நிகழ்வு அதாவது கிருமிகளை கிருமிகளே அழித்து உடலில் இருந்து வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது தோலின் தன்மையை கெடுக்கும் சன்ஸ்கிரின் லோசன் மற்றும் அதிகப்படியான கிரீம்களை பயன்படுத்தும் அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளில் அதிகப்படியான புற்றுநோய் உருவாகிறது என்பதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ளலாம்....

நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும்  உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் B மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.

வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.

பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுத்துவதை நான் உணர்ந்து இருக்கிறேன். நாங்கள் தொலை தூரமாக காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும் கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலானது பெரும் ஆற்றல் பெருகிறது புத்துணர்வுடனே இருக்கும் எவ்வளவு தூரம் நடந்தாலும் சோர்வோ பசியோ எடுக்காது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது. இருளர் இனமக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுக்க பூரண குணமாவதையும் நான் அறிவேன்.

நாகதாளியின் பயன்பாடுகள்.

1.சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக  பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.

2.உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து  இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து  கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும் அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.

3.நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.

4. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி(Enlargement of Spleen) என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்

5.ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.

6.சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது அதனால் தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் Extract உடல் குறைப்புக்கு மருந்தாக பல நூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் நடைபெறுகிறது என்பதையும் உணருவோம் . சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது.கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.

உலகின் மிகச்சிறந்த இயற்கை உரம் சப்பாத்தி கள்ளி என்றால் மிகையாகாது....

தென்னை மரத்தை சுற்றி இரண்ட்டிக்கு குழி எடுத்து அதில் சப்பாத்தி கள்ளியின் மடல்களை வெட்டி பரப்பி இதன்மீது கொஞ்சம் கல்உப்பையும் அடுப்பு கரியையும் போட்டு மண் மூடி விட ஆறு மாதத்தில் தென்னை மரம் கருகருவென்று இருப்பது மட்டுமின்றி தென்னம் பிஞ்சு உதிர்வது அப்படியே மட்டுபடும் ஒரு வருடத்தில் சுமார் 300 தேங்காய் வரை காய்க்கும் தென்னையை தாக்கும் பலவிதமான நோய்கள் நெருங்கவே நெருங்காது இதுவும் அனுபவ ரீதியான உண்மை.

நிலங்களில் இதனை பயன்படுத்துவதில் உள்ள சிரமம் இதில் உள்ள கூர்மையான முட்கள் தான் அதனை போக்க எளிய வழிமுறை. வெட்டி போடபட்ட மடல்களின் மீது  எள்ளுபுண்ணாக்கை தூவ ஒரு வாரத்தில் முட்கள் இருந்த இடம் தெரியாமல் அழுகிவிடும் பிறகு அத்தனை வயல்களிலும் பயன்படுத்தி மண்ணை வளமாக்கி கொள்ளலாம்.

ஆடு மாடு மேய்க்கும் போது கால்களில் இந்த முள் ஆழமான சென்று விடும் அப்பொழுது எள்ளை அரைத்து முள் உள்ள இடத்தில் கட்ட ஒரிரு நாளில் தூள் தூளாக வந்து விடும்.

தென்அமெரிக்க பழங்குடியினர் இதனை உணவு பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர் Tunas என்ற பெயரில் இதன் பழங்கள் விற்க்கபடுகிறதாம்.எங்கோ படித்தது.

இவ்வளவு சிறப்பான சப்பாத்தி கள்ளி பழத்தை நாமும் பயன்படுத்த முயல்வோம் ஏனெனில் இன்று புற்றுநோய் ஓர் பயமுறுத்தும் வகையில் உருவெடுத்து வருகிறது. இந்த பழத்தில் இருக்கும் Flavonoid,Polyphenol போன்ற வேதி பொருட்களால் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்பு உள்ளது என மேலை நாட்டு ஆய்வுகள் கூறுகிறது இந்த பழம் Antioxidant ஆக செயல்பட்டு உடல் செல்களுக்கு அதிகபடியான ஆக்சிஜனை கொண்டு செல்கிறது ....

நமக்கு தெரியும் இரத்த ஒட்டம் தடைபெற்ற இடங்களில் தான் புற்றுநோய் செல்கள் உருவாகிறது உடலில் உள்ள செல்களுக்கு அதிகபடியான ஆச்சிஜன் தேவை புற்றுசெல்களுக்கு சிறிதளவு ஆச்சிஜனே போதும். அதனால் தான் இவைகள் பல்கி பெருகி வருகிறது இந்த பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் செல்களுக்கு ஆக்சிஜனை  அதிகரித்து புற்றுசெல்களை அழிக்க உதவி புரிகிறது....

எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் சப்பாத்தி கள்ளி பழம். கொஞ்சம் மெனகெட்டாலே போதும். இது நமக்கான உணவு மருத்துவம். செலவில்லாத சிறந்த உணவு மருந்து.