Friday 28 June 2019

அமெரிக்காவின் பழைய சோறு பற்றிய ஆராய்ச்சி முடிவுக்கு வந்தது

அமெரிக்காவின் பழைய சோறு பற்றிய ஆராய்ச்சி முடிவுக்கு வந்தது
26 Apr. 2019 02:16

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!!

அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?? "தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்".....!!!

அதாவது "பழைய சோறு".......அந்த உணவு,

1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.

3.உடல் சோர்வை போக்குகிறது.

4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.

5.உடல் சூட்டை தணிக்கிறது.

6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.

7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.


8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்

சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…..இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA

SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….

ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு "பழையதை" பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…!!

இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்...உடல் நலத்தை பேணுவோம்.

விதைகளே பேராயுதம்...! கோ.நம்மாழ்வார்

விதைகளே பேராயுதம்...! கோ.நம்மாழ்வார்

” தேன்கனி பாரம்பரிய விதைத் திருவிழா, கண்காட்சி & கருத்தரங்கு ” :
*************
நிகழ்ச்சி பகிர்வு :
ஜெ.கருப்பசாமி

     நம்மாழ்வார் ஐயா விதைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கடந்த காலத்தில் நடந்த சம்பத்தை விளக்குவார்.

     நமது முன்னோர்கள் கடும் வறட்சியை ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. அப்போது அடுத்த வருடத்திற்குத் விதைக்கத் தேவையான விதை மட்டுமே கையிருப்பு உள்ளது.

   எப்படியும் மழைவரும், மழை வந்தால் கையிருப்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட விதையை விதைத்து பஞ்சத்தில் இருந்து மீண்டு விடலாம் என காத்திருந்தனர்.

    ஒருநிலையில் அடுத்த வேளை உண்பதற்கு கையிருப்பாக உள்ள தானியங்களும் தீர்ந்து விட்டது. ஆகையால் உணவு இல்லாமல் பலரும் மாண்டனர். அப்போதும் கூட ” விதைக்காக வைக்கப்பட்ட தானியத்தை “ உண்ணாமல் உயிரிழந்தனர்.

      நமது முன்னோர்கள் விதைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் இன்று அளிக்கிறோமா ?

     நாளை விதைக்க இரவு தான் விதை கடைக்கு சென்று மறு முளைப்பு இல்லாத, வறட்சி தாங்காத கம்பெனிகளின் விதையை வாங்கி பயன்படுத்தும்படி பழக்கப்படுத்தி விட்டார்கள்.

இந்நிலை மாறிட ?

  மறுபடியும் நம் முன்னோர்களின் பாரம்பரிய அறிவுகளையும், தொழில் நுட்பத்தையும், தொலைத்த பல லட்சரக மண்ணின் விதைகளையும் மீட்போம். மேலும் மரபு விதையின் முளைப்பை சோத்திக்கும் சோதனையான “ முளைப்பாரி “ போன்ற தொழில்நுட்பத்தையும் மீட்டு ” விதைப் பாதுகாவலர்களை “ உருவாக்குவோம்.

      இதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசியம் இன்று உள்ளது. அந்த வேலையை வானகமும், தேன்கனி அமைப்பும் போன்ற பலர் கையில் எடுத்துள்ளதுனர்.

மரபு விதைநாள் :
********
        அந்த வகையில் இயற்கை வழி விவசாயத்தை வாழ்வியலாக அனைத்து தரப்பினரின் மனதிலும் விதையாக விதைத்த நம்மாழ்வார் ஐயாவின் ஒவ்வொரு பிறந்தநாளும் ” மரபு விதை நாளாக “ ஏப்ரல் 6ம் தேதி வானகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

      இந்நிகழ்வில் தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் விவசாயிகளும், தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொண்டு 
ஒவ்வொரு ஆண்டும் விதைத்து பாதுகாத்த விதைகளை, ஐயாவின் காலடியில் விதைப் படையலும், முளைப்பாரியும் வைத்து அடுத்தவருட களப்பணியைத் தொடங்குவோம்.

” பாரம்பரிய விதைத் திருவிழா, கண்காட்சி & கருத்தரங்கு ” :
***********
    அதன் பின்னர் தேன்கனி அமைப்பானது ஒவ்வொரு பகுதியிலும் இந்த மரபு விதைகளை அனைத்து விவசாயிகளுக்கும், மக்களுக்கும், குழந்தைகளும் காட்சிப்படுத்தி அதன் சிறப்புகளையும் தனித்துவத்தையும் விளக்கி சிறு சிறு நிகழ்வாக நடத்துவது வழக்கம்.

  மேலும் அந்நிகழ்வில் விதைப் பாதுகாவலர்களையும் அறிமுகப்படுத்தி சிறப்பிப்பது தேன்கனி  கூட்டமைப்பினரின் வழக்கம். அதுபோல் இந்தாண்டும் 4ம் ஆண்டாக “ விதைத் திருவிழா “ மூலமாக விதைகளை பரவலாக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

நாள் : 14-7-2019 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை

இடம் : ராக்லாண்ட் பள்ளி, SCMS பள்ளிபின்புறம்,
சாட்சியாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு,
சிவகாசி. விருதுநகர் மாவட்டம்.

நிகழ்வு இடத்தை வந்தடைய இணைய வழி :
https://maps.google.com/?cid=5393687954330068139&hl=en&gl=gb

அனுமதி இலவசம்.
மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

தொடர்புக்கு: 94435 75431, 96554 37242, 9787648002.

நிகழ்வில்

விதை அரசியல் & மீட்பு கருத்தரங்கு :
*************
     விதையில் உலக அளவில் நடைபெறும் அரசியலும், அதிலிருந்து மீண்டு வருவதும் குறித்து உலகமுழுவதும் சுற்றி இயற்கை வழி விவசாயத்தை பரப்ப நம்மாழ்வார் ஐயாவோடு பல ஆண்டு களப்பணியாற்றி வருபவர்.

தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டமைப்பின் தலைவர்
அறச்சலூர் திரு. செல்வம் ஐயா அவர்கள் தன்னுடைய அனுபவத்தைப் பகிர உள்ளார்.

       விதை சேகரிப்பு, பாதுகாப்பு, பயிரிடல் நுட்பங்கள் குறித்து இயற்கை விவசாயிகள் பலர் தங்கள் அனுபவங்களை பகிர உள்ளார்கள்.

மரபு விதைக் கண்காட்சியில் :
***********
* 35 வகையான பாரம்பரிய சோளவிதை
• வறட்சியைத் தாங்கும் மானவாரி கருந்தானிய விதைகள்
• பாரம்பரிய நாட்டுக் காய்கறி, கீரை விதைகள்
• கால்நடைகளுக்கான தீவன விதைகள்
• மானாவரிப் பயறு வகைகள்
• எண்ணெய் வித்துக்கள்
• பாரம்பரிய நெல் ரகங்கள்
• உயிர்வேலி விதைகள்
• மண்ணை வளப்படுத்தும் பலதானியப் பயிர்களும், முளைப்பாரியும்
• விவசாயப் பணிகளை எளிமைப் படுத்தும் பண்ணைக் கருவிகள்
• மாடித் தோட்டப் பைகள்
• விதைப் பாதுகாவலர்களின் அனுபவப் பகிர்வு
•  தேன்கனி உழவர் சந்தை & மதிப்புக்கூட்டப்பட்ட பலகாரங்கள்
* மரபு கலைகள்

     நிகழ்வில் இயற்கை வழி விவசாயிகள் தங்களது பாரம்பரிய விதைகளை கண்காட்சிப் படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

fb/thenkanivalviyalmaiyam
www.thenkanivalviyalmaiyam.blogspot.com
நன்றி..

#saveseeds #savefarmers #தேன்கனி #நாட்டுவிதை

தினமும் 5 நிமிடங்கள் இந்த வர்மா புள்ளிகளை தொட்டால் போதும் கண் கோளாறே வாழ...

இனி வாயு தொல்லைக்கு குட் பை சொல்லுங்கள், எளிய வீட்டு வைத்தியம் | home re...

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.

அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு / நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை சுகமாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை சுகமாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

https://www.youtube.com/user/Ongarakudil
 சித்தர் மருத்துவம், சித்தர் வர்மக்கலை, சித்தர் நூல்கள், சித்தர் பாடல்கள், சித்தர் வாக்குகள், சித்தரியல் ஒலி/ஒளி நாடாக்கள், ஓலைச்சுவடிகள், சீவநாதச் சுவடிகள் மற்றும் பல சித்தரியல் தகவல்களைப் பெற

பசலைக்கீரை மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா...???

இன்சுலினை கொடுப்பதால் அது ரத்தத்தில் கலக்கும்.

ு இன்சுலினை கொடுப்பதால் அது ரத்தத்தில் கலக்கும்.

செறிமானமாகாத(தீங்கான) சர்க்கரை இவ்வாறு தினமும் நமது ரத்த ஓட்டம் மூலமாக உடலுறுப்புகளை நாளடைவில் பாதிக்கும். இதனால் தான் கண் பார்வை கெடுவது..சிறுநீரகம் கெடுவது..

எனவே நீரிழிவால் உறுப்புகள் பாதிப்படைவதில்லை. அதற்காக நீங்கள் எடுக்கும் ஆங்கில மாத்திரை தான் செறிமானமாகாத சர்க்கரைக்கு இன்சுலின் கொடுத்து நமது உறுப்புகளை பாதிக்கிறது. இதுதான் சூட்சமம்.
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------

சரி இதற்கு தீர்வுதான் என்ன?

உறுதியாக ஆங்கில மருத்துவமோ, மருந்து மாத்திரைகளோ தீர்வல்ல!

இது செரிமான கோளாறாதலால் (digestive disorder),
உண்கிற உணவை எப்படி நன்றாக செரிமானித்து,
தேவையான அளவு தரமான குளுக்கோஸை உற்பத்தி செய்வது
என்ற pre KG syllabus பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கவும்! 😀

இதுமட்டுமே சர்க்கரை நோய் எனும் செரிமானக் கோளாறிலிருந்து
முற்றிலும் வெளிவரும் ஒரே வழி!

♦கீழ்க்கண்ட மூன்று மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள்……

(#ஓர்_அறிவு குறைவாக உள்ள #மிருகங்கள், #பறவைகளுக்கு நன்றாக தெரிந்த வித்தை) 😊😀

♦1. எதை சாப்பிடுவது(proper diet)?

♦2. எப்படி சாப்பிடுவது
(proper eatingtechniques)?

♦3. எப்போது சாப்பிடுவது
(need based diet)?

#அவசியம்கடைபிடிக்க #வேண்டியஆரோக்கிய #குறிப்புகள்..

=>பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். =>தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். =>குளிர் பானங்களை தவிர்க்கவும்

=>பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள்.

=>பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும்.

=>உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி/செல்போன் பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

=>உண்ணும் போது உணவின் மீது கவனம் இருக்க வேண்டும். அப்போதுதான் செரிமானம் ஒழுங்காக ஆகும்.

தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் #ஜீரணத்திற்கும் #விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். #விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

#பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள்.

குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். 

#மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், #மனச்சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.

இதை கடைபிடித்தாலே நீரிழிவு காணாமல் போகும்.

மண்பானை நீர்- 7- 8 pH அளவு

"மண்பானை நீர்- 7- 8 pH அளவு"
             ------

இரத்தத்தில் pH அளவும் எலும்பு, மூட்டு வலியும்...!
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் . இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .

நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.

இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.
இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.

இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...! இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.

எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.
இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.
R.O.WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு

மண்பானை நீர் - 7- 8 pH அளவு. R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து.

 மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது. இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.

கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.
அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள்.
பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பனை செய்கின்றனர் சிந்திப்பீர் ஆரோக்கிய வாழ்வு வாழ முயற்சிப்பீர்.

உங்கள் ஆரோக்கியத்தில் என்றும் அக்கறையுள்ள
வேதா உடல் மற்றும் மனநலம் ஆலோசனை மையம்.

ஒரே ஒரு அவாரம் பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ்!! மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்!!

ஒரே ஒரு  அவாரம் பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ்!! மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்!!

எவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

எண்ணற்ற பருத்துவ குணங்களை கொண்ட ஆவாரம் பூ- வின் மருத்துவகுணங்கள் தெரிந்தால் நீங்கள் தான் பாக்கியசாலி. வறண்ட தரிசு நிலங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் அழகை பார்க்கும்போது கவிதை எழுதத்தெரியாத நபர்களுக்கே கவிதை வந்து கொட்டும்.

பொதுவாக ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நோய்களை குணப்படுத்தும் என கூறுவார்கள். ஆனால் இந்த ஆவாரைப்பஞ்சாங்கத்தை தினம் ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய், உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல் இவை அனைத்திற்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

குழந்தையின்மை பிரச்னை உள்ள பெ‌ண்க‌ள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.

உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

தோல் அரிப்பு ஏற்பட்டால் ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து அதை உடம்பில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவரம் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.

ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைது இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

சிறுநீரகம்செயலிழந்த நோயாளிகள்இந்துப்பு பயன்படுத்துவது #தற்கொலை_முயற்சிக்கு சமம் .!!!

சிறுநீரகம்செயலிழந்த #நோயாளிகள்இந்துப்பு
பயன்படுத்துவது தற்கொலை_முயற்சிக்கு #சமம்  .!!!

சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகள் இந்துப்பு பயன்படுத்துகிறீர்களா… ?!

ஆம் எனில் நீங்கள் தற்கொலை முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றே கூறவேண்டும் …

இதற்கு முழுக்க காரணமாக இருப்பது அறியாமையே ….
படிப்பறிவில்லா மக்கள் முதல் மெத்த படித்த மேதாவிகள் வரை இந்த அறியாமை பரவி பசுமரத்தாணி போல் அனைவரின் மனத்திலும் பதிந்துவிட்டது..

காரணம் தவறான இணைய பதிவுகளே ….

பாரம்பரிய மருத்துவம் அல்லது மூலிகை மருந்து என்ற பெயரில் பதிவுகளை வெளியிட்டால் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு அதனை பின்பற்றுவது , யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்வது போலாகும் …..

இதை விட பெரிய கொடுமை சிறுநீரக நோயாளிகள் இந்துப்பு பயன்படுத்துவதை
ஆமோதிப்பதும் , சிலர் கண்டும் காணாமல் இருப்பதும் மிகுந்த வேதனைக்குரிய
விஷயம்……😱

சிறுநீரக நோயாளிகள் இந்துப்பை குணமாக்கும் என்று பயன்படுத்தினால் மிக மிக மோசமான மீள முடியாத பாதிப்பையே ஏற்படுத்தும்.

சிறுநீரகம் செயலிழந்த நோய்யாளிகளே, அவர்களை அக்கறையுடன் பராமரிக்கும் உறவினர்களே சற்றே சிந்தித்து செயலாற்றுங்கள் …

சாதாரண உப்பின் மூலக்கூறுகளும் , இந்துப்பின் மூலக்கூறுகளும் ஏறத்தாழ ஒன்றே ...

அப்படி இருக்க எவ்வாறு இந்துப்பு கிட்னி  பெய்லியர்க்கு மருந்தாக அமையும் ?

செயலிழந்த சிறுநீரகத்தை செயல்பட வைக்கவோ , புதுப்பிக்கவோ இந்துப்பில் எந்த ஒரு மருத்துவ குணமும் இல்லை……😳

கடல் உப்பை விட இந்துப்பு சிறந்தது..

இந்துப்பு சிறந்து என்பதால் அது #செயல்இழந்த #கிட்னியைஇரண்டு #வாரத்தில்_சரியாக்கும் என்பது எல்லாம் ஒரு மிக மிக மிகைப்படுத்தப்பட்ட –எந்த ஒரு ஆதாரம்  இல்லாத #கட்டுக்கதை .

சாதாரண உப்பை பயன்படுத்துவதால் உடலில் என்னென்ன கெடுதல்கள் ஏற்படுமோ அவை  இந்துப்பு பயன்படுத்துவதால் ஏற்படாமல் தவிர்த்துகொள்ளமே தவிர , சிறுநீரகம் செயல்பட எவ்வகையிலும் பயன்படாது....

மேலும் மாறாக இரத்தத்தில் உள்ள உப்பின் அளவு அதிகரித்து உயிரை (சிறுநீரக நோயாளிகளின் ) பறித்துவிடும் வாய்ப்புகள் அதிகரித்துவிடும் …

ஏனெனில் இந்துப்பும் உப்பே……😳 ❗

புரியும்வண்ணம் ஓர் எடுத்துக்காட்டு………

மிளகும், திப்பிலியும் ஆரோக்கியத்திற்கு அரும்மருந்து என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ....

ஆனால் வாய்ப்புண் , வயிற்றுப்புண் கொண்டு அவதிப்படும் நிலையில் உள்ளவர்கள் அதை உண்போமா ?

நிச்சயமாக உண்ணமாட்டோம்... எடுத்துக்
கொண்டோமனால் தொல்லை அதிகரிக்கும்…..

இதுவே உண்மை.....

இந்துப்பு ஆரோக்கியமாக உள்ள அனைவருக்கும் சிறந்த ஒன்று...

ஏன் சிறுநீரக பாதிப்பு தவிர மற்ற நோயாளிகள் அனைவருக்குமே நன்மையளிக்கும் ஒன்று...

ஆனால் சிறுநீரக செயல்பாடு இல்லாத- சிறுநீரக செயல்பாடு குறைவு உள்ள  நோயாளிகள் எடுத்துக்கொண்டால் #மறைமுகமாக #தற்கொலைக்கு அவர்களுக்கு தெரியாமல்  முயற்சி  செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றே பொருள்..

நீர்க்கட்டிக்கான இயற்கை மருத்துவத்தை பார்ப்போம்...

நீர்க்கட்டி பிரச்சனை குணமாக எளிய மருத்துவம் ...

பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங்கிலத்தில் பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது. பல சிறிய நீர் நிரம்பிய கட்டிகள்(Cysts) கர்ப்பப்பையில் உருவாகுவதே பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்ரோம் ஆகும். தற்போது குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த நீர்க்கட்டிகள் உள்ளன. பெண்களின் மாதவிடாயும் நீர்க்கட்டி பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நீர்க்கட்டிக்கு தீர்வு காண்பதற்கு முன்பு மாதவிடாய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

மாதவிடாய்

பெண்களுக்கு கர்ப்பப்பையில் சினை முட்டைகள் உருவாகி அவை ஹார்மொன்களினால் (Harmon) சுழற்சிக்கு(cycle) உட்பட்டு உடைவதே மாதவிடாய் ஆகும்.முதல் மாதவிடாய் பதிமூன்று முதல் பதினெட்டு வயதுள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது. ஹார்மோன்களின் வேறுபாடால் மாதவிடாய் சுழற்சி(Menstrual Cycle) ஏற்படுகிறது. இந்த சுழற்சியினால் கருப்பை புறணி திடமாக தொடங்குகிறது. கருப்பை புறணி திடத்தன்மை வயதிற்கேற்பவும் மாதவிடாய் சுழற்சியின் எந்த நிலையில் இருகிறார் என்பதை பொருத்தும் வேறுபடும். மாதவிடாய் சுழற்சியின் ஆரம்பகட்டத்தில் கருப்பை புறணி திடமடைய தொடங்கும் அதே நேரத்தில் கரு முட்டையும் வளர தொடங்கும். மாதவிடாய் சுழற்சியின் பதினான்காம் நாள் முழு வளர்ச்சியடைந்த முட்டை விடுவிக்கப்படுகிறது. இது ஒவுலேஷன் (Ovulation) எனப்படும். அந்த முட்டை ஆணின் விந்தணுவிற்காக காத்திருக்கும். ஆணின் விந்தணு கருமுட்டையை அடைந்தால் கருவுறுதல் நடைபெறுகிறது. அப்போது கருவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கருப்பை புறணி வழங்குகிறது. ஆணின் விந்தணு கருமுட்டையை அடையாத பட்சத்தில் கருப்பை புறணி இரத்தமாக வெளியேறுவதே மாதவிடாய் ஆகும்.

நீர்க்கட்டியினால் மாதவிடாய் பாதிப்பு

நீர்க்கட்டியினால் மாதவிடாய் சுழற்சியில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பாளி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் உள்ளவர்களுக்கு அன்றோஜென் (Androgen insensitivity syndrome) எனப்படும் ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. அதனால் அவர்களுக்கு ஒவுலேஷன் எனப்படும் கருமுட்டையை விடுவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில்லை. அதனால் ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை அடைய முடிவதில்லை. அதனால் கருவுறுதல் நடைபெறாது. இந்த காலத்தில் பெரும்பான்மையான குழந்தையின்மை பிரச்சினைக்கு நீர்க் கட்டியே காரணம் ஆகும்.

பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் காரணங்கள்:

பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோமின் முதன்மை காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அசாதாரணமான ஹார்மோன்களின் உற்பத்தியும் பரம்பரை காரணிகளும் முதன்மை காரணிகளாக நம்பப்படுகிறது. மற்றுமொரு காரணியாக ஆன்றோஜென் எனப்படும் ஆண் ஹார்மோன் உற்பத்தி கருதப்படுகிறது. ஆன்றோஜென் ஹார்மோன் பெண் உடலில் உற்பத்தி ஆவது இயல்பு என்றாலும் நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு இது அசாதாரணமாக அதிகமாக உற்பத்தி ஆகிறது. அதிகப்படியான இன்சுலின் ஹார்மோன் ஆன்றோஜென்னின் அளவை அதிகரிக்கிறது. அதனால் மருத்துவர்கள் மேட்போர்மின்(Metformin) எனப்படும் சுகர் மாத்திரைகளை நீர்க்கட்டிக்கு அறிவுறுத்துகிறார்கள்.

நீர்க்கட்டியின் அறிகுறிகள்:

இதன் அறிகுறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. பெரும்பாலானவர்கள் கூறும் ஒரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி(Irregular Periods). இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண் ஹார்மோனான ஆன்றோஜென் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், மார்பகத்தின் அளவு குறைதல், முடி கொட்டுதல், குரலில் வேறுபாடு, முகப்பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படுகிறது.

இனி நீர்க்கட்டிக்கான இயற்கை மருத்துவத்தை பார்ப்போம்...

நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கழற்சிக்காய், மிளகு, மோர் மருந்து...

நீர்க்கட்டி பிரச்சனைக்கு கழற்சிக்காய் ஓர் அருமையான மருந்து ஆகும். வேறு எந்த மருத்துவத்தையும் எடுக்காமல் இந்த கழற்சிக்காய் மருத்துவத்தை மட்டும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் நீர்க்கட்டி பிரச்சனை கண்டிப்பாக குணமாகும். கழற்சிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த கழற்சிக்காய் காயாகவும் கிடைக்கும், சில கடைகளில் பொடியாகவும் கிடைக்கும். கழற்சிக்காய் சிறிய கோலிகுண்டு அளவில் பச்சையாகவும் அல்லது வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கழற்சிக்காயின் உள்ளே முந்திரிபருப்பு போன்று ஒரு பருப்பு இருக்கும். கழற்சிக்காயை உடைத்து இந்த பருப்பை எடுப்பது மிக மிக கடினம். கழற்சிக்காயின் வெளி ஓடு அவ்வளவு கடினத்தன்மை உடையதாகும். பெரிய சுத்தியல் வைத்து அடித்து உடைக்கலாம். கழற்சிக்காயை பக்கவாட்டில் அடித்து உடைத்தால் உள்ளிருக்கும் பருப்பு உடையாமல் எடுக்கலாம்.

காலையும் மாலையும் ஒரு கழற்சிக்காய் பருப்புடன், 3 அல்லது 4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும். இது பச்சை பாகற்காயை மெல்வது போன்று அவ்வளவு கசப்பாக இருக்கும். மிகவும் கசப்பாக இருந்தால் நன்றாக மென்று முடித்ததும் மோர் குடிக்கலாம். முன்பே குறிப்பிட்டது போல் வேறு எந்த மருத்துவத்தையும் பார்க்காமல் ஒரு மாதம் ஒரு நாள் கூட கைவிடாமல் இந்த கழற்சிக்காய் மருந்தை உண்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை முற்றிலும் குணமாகும்...

சர்க்கரை நோயால் காலில் புண் ஏற்பட்டால் பயம் வேண்டாம்

சர்க்கரை நோயால் காலில் புண் ஏற்பட்டால் பயம் வேண்டாம்

சுகர் எவ்வளவு வேண்டுமானலும் இருக்கட்டும் அந்த புண் ஆற்றி விடலாம்

அதற்கு தேவையான மூலிகை
புங்கா இலை  புங்கம்பட்டை அருகம்புல்  நாயுருவி கரிசலாங்கண்ணி கீழாநெல்லி வேம்பு கொழுந்து குப்பைமேனிஇலை சிறு தும்பை இலை மற்றும் அவர் அவர் சுற்றி இருக்கும் மூலிகை போதும்

மேலே சொன்னதில் ஐந்து மூலிகை சமாஅளவு எடுத்து சாந்து போலா அறைத்து அதற்கு தேவையானா நல்லெண்ணையில் கலந்து சூடுபடுத்தி பசுமை நிறம் மாறியது இறக்கி ஆறாவைத்து

அந்த புண் மீது கட்டி வாருங்கள் தண்ணீர் கசியாது இரண்டு நாளைக்கு ஒருமுறை எடுத்து புதிதாக கட்டி வாருங்கள்

கட்டு கட்டியதும் அந்த எண்ணெய் அந்தா இடத்தில் விட்டு வாருங்கள் கண்டிப்பாக குணமாகும்

இதய ஆரோக்கியத்தை காக்கும் #பூசணி விதை....

இதய ஆரோக்கியத்தை காக்கும் #பூசணி விதை....

#பூசணிக்காய் மகிமை நிறைந்தது. அதிலும் பூசணி விதைகளுக்கு எக்கச்சக்க மருத்துவக் குணங்கள் உள்ளன. பூசணி விதைகளில் உள்ள சத்துகளையும், நம் ஆரோக்கியத்துக்கு அள்ளி வழங்கும் நலன்களையும் அறிந்து கொள்ளலாம்.

இதில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.

இவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும். மக்னீசியம் ரத்த அழுத்தம் மற்றும் `சடர்ன் கார்டியாக் அரெஸ்ட்’ (Sudden Cardiac Arrest) எனப்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும்.

இவற்றில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். துத்தநாகச் தாதுசத்து குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த உணவு இந்த விதைகள்.

தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

ஆரோக்கியமான கொழுப்பு விதைகளில் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தைச் சீராக்கும். இதனுடன் ஆளி விதைகளைச் சேர்த்து உண்டால் பலன் மேலும் அதிகரிக்கும்.

பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி, ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். இந்த விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறையும். விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம்

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம்

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் என்பது சொல்ல முடியாத ஒரு தொந்தரவு. மிகவும் கஷ்டப்படுவார்கள், அழுது கொண்டும் இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கவும் மலச்சிக்கல் வந்தால் சரி செய்யவும் வீட்டு மருத்துவ முறைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் குழந்தைகளை இந்த மலச்சிக்கல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்கலாம்.

0-6 மாத குழந்தைகள்…

தாய்ப்பாலை முறையான இடைவேளியில் சரியாக கொடுத்தாலே மலச்சிக்கல் தொந்தரவு வராது. இதனுடன் பாலூட்டும் தாய், கீரைகள், பூண்டு, காய்கறி, பழங்கள், கைக்குத்தல் அரிசி, சிறுதானியம், பருப்பு - பயறு வகைகள் போன்ற நல்ல தரமான உணவுகளை சாப்பிடுவதும் முக்கியம். இப்படி முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்றி வரும் தாய்மார்கள் பாலூட்டி வந்தாலே குழந்தைக்கு மலச்சிக்கல் தொந்தரவு இருக்காது.
6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளின் மலச்சிக்கல் தொந்தரவுகளை நீக்கும் வழிகள்...
பாலூட்டும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் சரியாக இருக்க வேண்டும்.
தாயின் மனநிலை, மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் முக்கியம்.
குழந்தை பாதுகாப்பான உணர்வை உணர்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள்.
தாயின் அரவணைப்பும் அன்பும் மிகவும் முக்கியம்.
ரப்பர் மேட்டில் குழந்தைகளைப் படுக்க வைக்க கூடாது.

மலச்சிக்கல் நீங்க வீட்டு வைத்திய முறைகள்
#1. திராட்சை சாறு
பச்சை திராட்சை அல்லது கறுப்பு திராட்சை - 8, எடுத்துக் கொள்ளவும்.
அரை மணி நேரம் சாதாரண தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவவும்.
பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் இந்த 8 திராட்சைகளைப் போட்டு 1 மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.
திராட்சைகள் நன்கு ஊறி, பாதி வெந்து விடும்.
பின்னர், இந்த திராட்சைகளையும் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு மத்தால் நன்கு மசித்து சாறு எடுக்கவும்.
இந்த சாறை வடிகட்டி, தினமும் குழந்தைகளுக்கு கொடுத்தால் மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்கவே இருக்காது.
#2. இளஞ்சூடான தண்ணீர் மேஜிக்
குழந்தைகளுக்கு எப்போதுமே இளஞ்சூடான தண்ணீரைக் கொடுக்க வேண்டும்.
ஜூஸ் கொடுத்தாலும் அதில் இளஞ்சூடான தண்ணீரைக் கலப்பது நல்லது.
போதுமான அளவு குழந்தைக்கு தண்ணீர் தருகிறீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
#3. வாழைப்பழ கூழ்
வாழைப்பழத்தைக் கரண்டியால் நன்கு மசித்து கூழாக்கி அதில் டேட்ஸ் சிரப் ஊற்றிக் கொடுக்கலாம். தினமும் ½ கப் அளவுக்கு இதைக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் நீங்கிவிடும்.
#4. சப்போட்டா கூழ்
சப்போட்டாவை பாதியாக அறிந்து மேலிருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, ஸ்பூனால் அதன் சதைப்பகுதியை எடுத்து ஸ்பூனால் நன்கு மசித்துக் கொள்ளுங்கள். இதைக் குழந்தைக்கு கொடுத்து வர மலச்சிக்கல் இருக்காது.
#5. உலர்திராட்சை டானிக்
உலர்திராட்சை - 15, எடுத்துக் கொள்ளவும்.
நன்கு கழுவி விடவும்.
அரை டம்ளர் வெந்நீரில் உலர்திராட்சை 4 மணி நேரம் அல்லது இரவு முழுக்க ஊற விடவும்.
ஊறியதும் தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதை நன்கு வடிகட்டி, குழந்தைக்கு கொடுக்கவும்.
இதைத் தொடர்ந்து செய்தாலே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்காது.
#6. இளஞ்சூடான ஒத்தடம்
ஒத்தடம் பேக்கில் இளஞ்சூடான தண்ணீர் ஊற்றி அதைக் குழந்தைகளின் வயிற்று, முதுகு பகுதியில் ஒத்தி ஒத்தி ஒத்தடம் கொடுப்பது போல செய்யுங்கள்.
இதனாலும் மலச்சிக்கல் தொந்தரவு நீங்கும்.
#7. பப்பாளி கூழ்
பப்பாளி கூழ் அவ்வப்போது குழந்தைகளுக்கு கொடுத்து வர மலச்சிக்கல் நீங்கிவிடும்.
#8. கொய்யா ஜூஸ்
கொய்யா பழத்தை சிறிது சிறிதாக அறிந்து, விதை நீக்கி, ஜூஸ்home  எடுத்து வடிகட்டி ½ டம்ளர் அளவுக்கு குழந்தைக்கு கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.
#9. இஞ்சி டிரிங்க்
ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, 1 டீஸ்பூன் தேன் கலந்து அரை டம்ளர் இளஞ்சூடான நீரில் கலந்து கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.
இதை 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
#10. ஆப்பிள்
ஆப்பிளை நன்கு கழுவித் தோலை நீக்கி கொள்ளுங்கள்.
ஆப்பிளை துண்டு துண்டாக அறிந்து கூழாக்கி கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் டேட்ஸ் சிரப் கலந்து குழந்தைக்கு கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.

புற்றுநோய்க்கு பழங்குடி இருளர் மருத்துவம்.

புற்றுநோய்க்கு பழங்குடி இருளர் மருத்துவம்.

இதை பாதுகாக்கவும் அடுத்த தலைமுறைக்கு கடத்தவும் வேண்டும்.

நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.

பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால்.

பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு  112 ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம்  செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மூன்று பரம்பரை ஆட்கள் இடங்கள் இங்கு உள்ளது. அவ்வகையில் வள்ளியம்மாள், பொன்னியம்மாள், லட்சுமியம்மாள் என மூவர் உள்ளனர். முக்கியமானவர் வள்ளியம்மாள் ரவீந்திரன் வைத்தியர்.

பெயரை கொடுத்து விட்டு வைத்தியரை பார்க்க காத்திருந்தால் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் மிகப்பெரிய ஆச்சர்யம்.

கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் தஞ்சை மீனாட்சியில் கைவிடப்பட்டவர் மூன்று மாதம்தான் உங்கள் ஆயுள் என்று சொல்லப்பட்டவராம் எட்டு லட்சம் வரை செலவு செய்தவராம். சாகத்தானே போறோம் கடைசி முயற்சியாக இதை பார்ப்போம் என்று வந்தவர் பதினாறு மாதங்களாக வருகின்றேன் என்றார்.

இங்கு பெரும்பாலும் அலோபதி கைவிடப்பட்ட நிலையில் வருகின்றார்கள். பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்பவர் சொல்கின்றார். ராமகிருஸ்ணாவுல பதினைந்து லட்சம் செலவு செஞ்சேனுங்க வீட்டை காட்டை வித்து பாத்தணுங்க கடைசில சாவு உனக்கு கன்பார்முடான்டானுக.. தென்னை மரத்து மாத்திரைய வாங்கி வச்சுட்டுத்தானுங்க இங்க வந்தேன்... இதை ஒரு மாசம் பாப்போம். சரியாகுலையா இருக்கற சொத்தை பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு நாம செத்தரலாம்முன்னுதான் வந்தேன். இன்னிக்கு மூணு வருசம் ஆச்சுங்க..என்னோட நோய் குணமாயிருச்சு ஆனாலும் மருந்தை நிறுத்தலை   இன்னும் பத்து வருசம் வாழ்ந்தா போதுங்க எம் பையனை கரையேத்திருவேன் என்று தன் மகனை கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றார்.

இப்படி பல பேரின் கதை சொல்ல...ஆச்சரியமாக உள்ளது. வைத்தியரிடம் கேட்ட போது இந்த வைத்தியம் முதல் ஸ்டேஜ்ல இருந்தால் 100%குணப் படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கையிருப்பதில்லை... சுற்றிவிட்டுதான் இங்கு வருகின்றார்கள். நான்காவது ஸ்டேஜ்ஜில் 80%பேரை பிழைக்க வைத்திருக்கின்றேன்... அதற்கு மேல் இறைவன் கருணை என்றார்.

இது சாத்தியமா? உண்மையா? என்று அவநம்பிக்கையோடுதான் சென்றேன். அங்கு இருந்த மருந்து வாங்க வந்த 100பேர்களின் கதைகளை கேட்ட போது நம்பிக்கையுள்ளது.

யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் கை விடப்பட்ட நிலையில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் இன்னும் கொஞ்சம் காலம் வாழட்டும்.


Address:
 VALLIYAMMAL GURUKULAM,
Tribal Traditional Ottamooli Cancer Treatment Center,
CHINDAKKI, MUKKALI, ATTAPADY, PALAKKAD-678581

Ph: 09946097562

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல! நோயாக மாற்றப்படுகிறது!

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!  நோயாக மாற்றப்படுகிறது!

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination).

2. அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst)

3. அதிக பசி (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger)

இவைகள்தான் உளகலாவிய
சர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms of Diabetes Mellitus) கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!

நவீன மருத்துவத்திற்கு தெரிந்துவிட்டால்தான் நோயாக மாற்றப்படுகிறது!

நீங்கள் அந்த மருத்துவத்திற்கும் அது சார்ந்த அனைத்து  "வியாபாரத்திற்கும்" நிரந்தர ATM card ஆக மாற்றப்படுகிறீர்கள்!

இந்த அறிகுறிகள் பல கோடி ரூபாய் வணிகமாக மாற்றப்படுகிறது!

ஏன் ஏற்படுகிறது என்ற தெளிவை,
நவீன மருத்துவம் விளக்குவதில்லை!

அப்படி ஏதேனும் medical miracle நடக்குமேயானால் அடுத்த நொடியிலிருந்து நீங்கள் சர்க்கரை நோயிலிருந்து பூரண குணமடைய ஆரம்பித்துவிடுவீர்கள்!

இது உங்களை ஆறுதல் படுத்த சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல!

நடைமுறையில் சாத்தியாமாகி கொண்டிருக்கும் 100 விழுக்காடு உண்மை!

#ஏன்_ஏற்படுகிறது?

★நாம் தெரிந்துக்
கொள்வோம்!

இந்த கோரப்பிடியிலிருந்து விடுபடுவோம்!
வராமல் தடுப்போம்!

♦செரிக்கப்பட்ட மாவுச்சத்து இரண்டுவிதமான குளுக்கோஸாக மாற்றப்படுகிறது!

1. தரமான குளுக்கோஸ்,

2. தரமற்ற குளுக்கோஸ்.

இதை இனம்கண்டு பிரிப்பது "கனையம்" என்கின்ற pancreas!
இது இயற்கை நமக்களித்துள்ள அற்புத உருப்பு!
இது என்றைக்கும் "நல்ல function" தான் செய்யும்!
"Malfunction" செய்யாது!

தரமான குளுக்கோஸுக்கு மட்டுமே "insulin" சுரக்கும்!
தரமற்ற குளுக்கோஸஸுக்கு insulin சுரக்காது, சுரக்கக்கூடாது!

#ஏன்?

தரமற்ற சர்க்கரை
"உடல் செல்களுக்கு" சென்றடைந்தால், அவைகள் நோய்வாய் படும்!
அனைத்து உறுப்புகளும், பலமிழக்க ஆரம்பிக்கும்!

ஆக,
தரமற்ற சர்க்கரை இன்சுலின் சுரப்பு கிடைக்கப்பெறாமல்,
செல்களால் நிராகரிக்கப்பட்டு,
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை தூக்கிவிட்டு,
சிறுநீரகத்தால்,
சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு,
இரத்தம் சுத்திகரிக்கப்படும்!

எனவே சிறுநீர்வழியாக சர்க்கரை வெளியேறுவது நோயல்ல!

Pancreas னுடய malfunction னும் அல்ல!

மாறாக நம்மை நீண்ட நாட்களுக்கு உயிரோடு வைத்திருக்கும் உன்னத தற்காப்புக் கவசம்!
"A divine survival body mechanism"...!

இந்த சிறுநீர் யாருக்கும் தெரியாமல் வெளியேற்றுதல் தப்பித்தலாகும்!
மாறாக "நவீன மருத்துவத்திற்கு" தெரிந்துவிட்டால், "விற்பனை பொருளாக" மாற்றப்பட்டு,
உங்களை வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாக்கி, 
உலக இன்ப துன்பங்களிலிருந்து விரைவாக விடுவித்துவிடும்!

தொடர்ந்து,
செரிமானக் கோளாறு காரணமாக, தரமற்ற சர்க்கரையை உற்பத்தி செய்வதால்,
உணவு சாப்பிட, சாப்பிட,
இடைவிடாது உற்பத்தியாகி கொண்டிருக்கும்
"#குப்பை_சர்க்கரை" சிறுநீரகம் ஓயாமல் வேலைசெய்து, சிறுநீராக வெளியேற்றப்படுகிறது!

★இப்போது தெளிவாகியிறுக்கும்,
ஏன்
"Polyurea"(excessive and frequent urination)
"#அடிக்கடி_சிறுநீர் #கழித்தல்"
ஏற்படுகிறது என்று?

நமது உடல் 70 விழுக்காடு நீரால் ஆனது!
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதால்,
நீர் சத்து குறைந்து "Dehydration" எனும் நிலை ஏற்படுகிறது!
இதுவே நா வறட்சி மற்றும் அதிக தாகம்!
இந்நிலையை சமாளிக்க உடல்  அதிகப்படியான நீர் கேட்கிறது!

★இப்போது விளங்கியிருக்கும்
ஏன்,

2. Polydipsia(dryness of mouth-excessive thirst) #அதிக_தாகம் ஏற்படுகிறது என்று?

எவ்வளவு உணவு
உட்கொண்டாலும், எத்தனை முறை பிரித்து, பிரித்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும்,
தரமான சர்க்கரையளவு குறைவாகவும்,
தரமற்ற சர்க்கரையளவு அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில்,
தரமற்ற சர்க்கரை சிறுநீரால் வெளியேற்றப்படுவதால்,
உடல் செல்களுக்கு உணவுதட்டுப்பாடு ஏற்பட்டு,
நம்முடல் தொடர் சோர்வை உணர்கிறது!

★இப்போது புரிந்திருக்கும்
ஏன்

3. Polyphagia(excessive hunger-feeling tired)
#அதிகபசிமற்றும்அதிக #சோர்வு__ஏற்படுகிறது என்று?

சரி இதற்கு தீர்வுதான் என்ன?

உறுதியாக மருத்துவமோ, மருந்து மாத்திரைகளோ தீர்வல்ல!

இது செரிமான கோளாறாதலால்
(metabolic disorder),
உண்கிற உணவை எப்படி நன்றாக செரிமானித்து,
தேவையான அளவு தரமான குளுக்கோஸை உற்பத்தி செய்வது
என்ற pre KG syllabus பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கவும்!

இதுமட்டுமே சர்க்கரை நேய் எனும் செரிமானக் கோளாறிலிருந்து
முற்றிலும் வெளிவரும் ஒரே வழி!

♦கீழ்க்கண்ட மூன்று மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள்……

(#ஓர்_அறிவு குறைவாக உள்ள #மிருகங்கள், #பறவைகளுக்கு நன்றாக தெரிந்த வித்தை)

♦1. எதை சாப்பிடுவது(proper diet)?

♦2. எப்படி சாப்பிடுவது
(proper eatingtechniques)?

♦3. எப்போது சாப்பிடுவது
(need based diet)?

#அவசியம்கடைபிடிக்க #வேண்டியஆரோக்கிய #குறிப்புகள்..

பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செய்யங்கள் .

குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக  நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். 

கடுமையாக உழைக்காதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச்சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு...

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு...

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை,
என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது.
நம் கண்ணாடி அணிகிறோம்.

இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா?அல்லது குறைகிறதா?கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.

பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா?
இது என்ன மருத்துவம்?

கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா?நோயை அதிகப்படுத்து
வதற்கு வைத்தியர் தேவையா?

கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம்.

இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை.

மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது.
நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது.

ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது.

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான கண்ணில் கிடையாது.இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

எனவே நாம் புரிந்து கொள்ள அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம்.

இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.

#கண்பார்வைகுறைபாடு_நீங்க...

1-முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்;

கண் பார்வை குறைபாடு நீங்கும்.

2-கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும்.
கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.

3-முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
4-இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

5-வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.

6-முதுமைக் காலத்தில் கண்டிப்பாகதலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.

7-இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும்.விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவவேண்டும. இது கிராமங்களில் முன்பு செய்து வந்த வீட்டு வைத்தியம்,

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது.இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது.ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து ,
மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.

பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உச்சி வெயிலில் அலையக் கூடாது.
முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர்.

இது குணமாக:

#முருங்கை_விதை – 100 கிராம்
#மிளகு – 100 கிராம் இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத் தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம் சூடேறி எண்ணெய்கசியும்.
அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.

பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை.

இதை ஆங்கிலத்தில், “#காட்டிராக்ட்” என்பர்.

கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது.

கண் புரை நோய், 40 வயது முதல்துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும்.

கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும்.
இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

கண் பார்வை குறைபாடு சரி செய்யலாம்.

வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஓன்று.

நாம் நம் வீட்டு அறையில் தினமும் அகழ்விளக்கு ஏற்ற வேண்டும்.அந்த ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.

அந்த ஒளியில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும்.அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது.

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும்.

எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மை யாகும்.நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும்.

அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும்...

1.மனக் கவலை தூள் படும்
2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்
3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்
4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்
5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்
6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்
7.ஒற்றைத்தலைவலி சரியாகும்
எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம்.
தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.

தெரிந்து கொள்வோம் மிகவும் பயன்உள்ளதகவல்

தெரிந்து கொள்வோம் மிகவும் பயன்உள்ளதகவல் 

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

மேலும் இது போன்ற ஆரோக்கியமான தகவல்களுக்கு இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி

கோடைகால குறிப்புகள் - 2019

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞கோடைகால குறிப்புகள் - 2019🌞🌞🌞🌞🌞🌞🌞🌞


🌞காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டியவைகள்🌞

🌞பழைய சாத தண்ணீர் (வாரம் 2 நாட்கள்)🌞

🌞ஊற வைத்த வெந்தயம் (வாரம் 2 நாட்கள்)

பழங்கள் ( மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி - இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்தும் சாப்பிடலாம்)

(வாரம் 2 - 3 நாட்கள் )🌞


🌞காலை எழுந்தவுடன் தாக உணர்வை கவனித்து, அதற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக பெருங்குடலின் நேரமாகிய 5 மணி முதல் 7 மணி வரைஇருக்கும் தாக உணர்வு மிக முக்கியமானது. அப்போது நாம் குடிக்கக்கூடிய தண்ணீர் நமது குடல்களை சுத்தப்படுத்தி நல்ல பசி உணர்வை கொடுக்கும். நல்ல ஜீரணத்துக்கும் உதவிசெய்யும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடல் உஷ்ணமும் கட்டுக்குள் இருக்கும்.🌞


🌞காலை உணவாக கம்மங்கூழ், பழைய சாதம், கேழ்வரகு கூழ் போன்றவற்றை வாரம் 2 நாட்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உடன் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும்அதற்கு கொத்தமல்லி மற்றும் புதினா துவையல்களையும் தொட்டுக்கொள்ளலாம்.🌞


🌞பழைய சாதத்தை இரவு மண் பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்துவிட வேண்டும். பழைய சாத தண்ணீர் குடிக்கும் போதோ சாதமாக சாப்பிடும் போதோ, மண்பாத்திரத்தில் ஊற வைக்கப்பட்டிருந்தால் அது சுவையாகவும், குளிர்ச்சி தரும் வகையிலும் அமையும்.🌞


முடிந்தவரை காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே தண்ணீரை தவிர ( முறையான தாகம் இருந்தால் மட்டும் ) எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.🌞


🌞மதிய உணவு சாப்பிட போவதற்கு முன்னர் சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு அதன்பின்னர் 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம். இதன் மூலம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இடையில் தண்ணீர் தேவைப்படுவதை தவிர்க்க முடியும். இது நல்ல தரமான ஜீரணத்தை உறுதி செய்யும்.


மதிய உணவில் நீர்க்காய்கள் நிறைய சேர்த்துக் கொள்ளலாம். ( புடலங்காய், பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய் முக்கியமானவை).🌞


🌞மதிய உணவில் வாரம் 3 - 4 நாட்களாவது மோர் சேர்த்துக் கொள்வது நல்லது. மோரை கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி போட்டு ஊறவைத்து பயன்படுத்தலாம். மோரை தாளித்து பயன்படுத்துவது அதன் புளிப்பு தன்மையை குறைப்பதாக அமையும்.🌞


🍗அசைவ உணவுகள் சாப்பிடுவதாக இருந்தால் மதிய வேளைகளில் எடுத்துக் கொள்ளுங்கள். இரவு எடுத்துக் கொள்வதாக இருந்தால் 8 மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டு முடித்துவிடுங்கள். அசைவத்தில் காரமும் மசாலாக்களும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது மிக முக்கியம். அசைவ உணவுகளில் ஆட்டு இறைச்சியின் மார்பெலும்பில் சூப் வைத்துகுடிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும் ஒரு அற்புத உணவாகும்.🌞


🍹மாலை வேளைகளில் தேவைப்பட்டால் பழ ரசங்கள் எடுத்துக்கொள்ளலாம்.


நாள் முழுக்கவே தாக உணர்வை நன்கு கவனித்து அதற்கேற்ற வகையில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிக்க கூடாது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.


🌞சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தான் இன்றைக்கு நாம் பெரும்பாலும் குடிக்கின்றோம். அந்த தண்ணீரை ஒரு மண் பானையில் ஊற்றி வைத்து அதனோடு வெட்டி வேர் சேர்த்து தண்ணீர் குடிக்கலாம். குறைவான நீரில் முழுமையாக தாகம் நீங்க இது பெரும் உதவியாக இருக்கும். (30 லிட்டர் தண்ணீருக்கு 3 வெட்டி வேர்கள் )


🌞எப்போதுமே அமர்ந்த நிலையில் வாய் வைத்து தண்ணீர் குடிப்பதே நல்லது.


ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்த பின்னரும் சிறிதளவு நீர் குடிக்க வேண்டும். ( தாகம் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை )


🌞குளிர்சாதன அறைகளில் தூங்குபவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். குளிர்சாதன வசதி என்பது நிச்சயமாக நமது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. அதேநேரத்தில் அதிக சூட்டில் இரவு தூக்கம் வராமலும் கஷ்டப்பட வேண்டாம். எனவே ஏசி யின் பயன்பாட்டு அளவை முடிந்த வரை குறைத்து கொள்ள திட்டமிட வேண்டும்.


உதாரணம்: அதிகாலை 3 மணிக்கு மேல் ஏசி-யை அனைத்து விட வேண்டும். 3 மணிக்கு மேல் நமது நுரையீரலின் பிரத்யேக நேரமாகும். இந்த நேரத்தில் தூய்மையான ஆக்சிஜன்காற்றில் பரவிக்கிடக்கும். எனவே 3 மணிக்கு மேல் ஜன்னல்களை திறந்து விட்டு காற்றோட்டமான சூழலில் உறங்குவது ஏசி யின் பாதிப்புகளில் இருந்து நம்மை ஓரளவு காக்கும்.🌞


🍉பழங்களை பொறுத்தவரை தர்பூசனியும், மாதுளையும், கிர்ணியும் கோடை காலத்தில் நமது உடலின் நீர் சமநிலையை பாதுகாக்க உதவும் முக்கிய பழங்களாகும். எனவே ஒருநாளைக்குஅவற்றில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக சாப்பிட்டு விட வேண்டும்.🍉


🌞தினமும் தலைக்கு குளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பட்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட தலைக்கு குளித்து நல்லது. மேலும் அதிக நேரம்குளிப்பதும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் மற்றும் சமநிலையில் வைக்கும்.🌞


🌞அதேபோல, வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்து நல்லது. தலைக்கு தேய்ப்பது மட்டுமல்லாமல் உடல் முழுக்கவே தேய்த்து இளங்காலை வெயிலில் ( 6 முதல் 7.30மணி வரை ) ஒரு 30 முதல் 40 நிமிடங்கள் வரை கண்கள் மூடி அமர்ந்துவிட்டு பின்னர் இதமான நீரில் குளித்து விடுவது நமது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.🌞


🌞அவ்வப்போது இளநீர் குடிப்பதும், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதும், வெள்ளரிக்காய் சாப்பிடுவதும் நமது நீர் சக்தியின் தரத்தை உறுதி செய்யும். ஒவ்வொரு முறை இளநீர் குடிக்கும் போதும்அதன் வழுக்கையையும் சாப்பிட வேண்டும்.🌞


🌞கோடை காலத்தில் இரவு உணவாக தோசை, பரோட்டா, பிரியாணி, ஃபிரைடு ரைஸ் போன்ற உணவுகளை தவிர்த்து விட்டு, ஆவியில் வேக வைத்த உணவுகளையும், களி உள்ளிட்டஉணவுகளையும் சாப்பிடுவதே நல்லது.🌞


🌞கோடை காலத்தில் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல இரவு உறங்க செல்லும் முன் நமது இடுப்பு பகுதிகள் உள்ளிட்ட பிறப்புறுப்பு பகுதிகளை நன்கு கழுவிவிட்டு உறங்க செல்வது சுத்த தன்மையை ஏற்படுத்துவதோடு, நமது சிறுநீரக பகுதிகளை குளிர்ச்சிப்படுத்தும் விதமாகவும் அமையும்.🌞


🌞கோடைகாலங்களில் வியர்வை மூலமாக நடைபெறும் கழிவு நீக்கம் முழு அளவில் இருக்கும். எனவே நமது வியர்வை துவாரங்களில் தடையில்லா திறந்த நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். எனவே சோப்பு உபயோகங்களை குறைத்துவிட்டு இயற்கையான குளியல் பொடிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் சோப்களின் ரசாயனங்கள் நமது வியர்வைதுவாரங்களை அடைக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். பொதுவாகவே அனைத்து காலங்களிலுமே சோப் பயன்படுத்தாமல் குளியல் பொடியை பயன்படுத்துவதே நல்லது. அப்படியே சோப்பு பயன்படுத்தினாலும் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். சோப்பு தேய்த்து விட்டு, வெறும் கையாலோ அல்லது நார் போன்ற பொருட்களாலோ நமது வெறும்உடலை தேய்த்துவிடுவதன் மூலம் சோப்புகளின் ரசாயனங்கள் நமது வியர்வை துவாரங்களை அடைப்பதை தடுக்க முடியும்.🌞


🌞பொதுவாகவே கோடை காலங்களில் அதிகாலை நாம் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியும். எனவே இரவு உணவை சீக்கிரம் முடித்துவிட்டு சீக்கிரம் தூங்க சென்றுவிடுவது தான் நல்லது. அதுதான் போதுமான தூக்க நேரத்தை உறுதி செய்யும்.🌞


🌞கூடுமானவரை 9 மணிக்கு மேல் மொபைல், டிவி, கணிப்பொறி பயன்பாடுகளை நிறுத்திவிட்டு உறங்க சென்றுவிடுவது மிக மிக நல்ல பலன்களை நமக்கு ஏற்படுத்தும். 🌞


🌞கோடைகாலங்களில் மொட்டை மாடியில் படுக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். இதில் எந்தவித பாதகங்களும் இல்லை. இருந்தாலும், உறங்க செல்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி குளிர்ச்சிப்படுத்த வேண்டியது மிக முக்கியம். 🌞


🌞ஃபோம் மெத்தைகளில் படுத்து உறங்குவதை தவிர்த்துவிட்டு தரையில் பாய்விரித்து அதன் மீது ஜமுக்காளம் அல்லது போர்வை விரித்து உறங்குவது மிக நல்லது. வெறும் தரையில்படுக்க வேண்டாம்.🌞


🌞வீட்டில் முழுமையான காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே நமது வீட்டினுள் உறையும் உஷ்ணத்தை வெளியேற்றிவிடும். 🌞


👖ஜீன்ஸ் உள்ளிட்ட மிக இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.


🌞IT துறைகளில் பணியாற்றுபவர்கள் நாள் முழுக்கவே ஏசி அறையில் இருக்க வேண்டிய சூழல் இருப்பதால் அவர்கள் இரவு உணவாக பழங்கள் மட்டும் சாப்பிடுவது அவர்களின் உடல்உஷ்ணத்தை குறைக்கும். மேலும் அதுபோன்ற சூழலில் அவர்கள் மாலை சிற்றுண்டியை சற்றே அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது இரவு உணவாக பழங்களே போதுமானதாக இருக்கும்.


🍼தூய்மையான பசும்பால் கிடைத்தால் இரவு உணவாகவோ அல்லது இரவு உணவுக்கு பின்னரோ சிறிதளவு எடுத்துக்கொள்வது நல்லது. ஜீரண குறைபாடுகள் இருப்பவர்கள் பாலைதவிர்த்து விடுவது நல்லது.


🌞மார்க்கெட்டிங் துறைகளில் பணிபுரிபவர்கள், வியாபாரம் காரணமாக வெயிலில் வெளியில் அலையக்கூடிய சூழலில் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை முகம் கழுவிக் கொள்ளுங்கள். முகம் கழுவும்போது பின் கழுத்தையும், காதுகளின் உட்புறத்தையும், கழுத்து பகுதிகளையும் தண்ணீரால் நனைப்பது மிகவும் முக்கியம்.🌞


🌞பெண்களுக்கு பொதுவாகவே நீரின் தேவை அதிகம் இருக்கும். எனவே குறிப்பாக பெண்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லத்தரசிகளும், பணிபுரியும் பெண்களும் தங்களுக்கு அருகில் கண்டிப்பாக ஒரு தண்ணீர் குவளையை வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தாகம் எடுத்த மறுநொடி நீர் அருந்திவிட்டு தான் அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.🌞


🌞குழந்தைகள் பொதுவாகவே நீரின் தேவையை உணராதவர்களாகவும் அறியாதவர்களாகவுமே இருப்பார்கள். எனவே அவர்களை அவ்வப்போது தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.🌞


🌞இவைகளெல்லாம் போக நமது வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுபவங்கள் சொல்லும் கோடைகால குறிப்புகளையும் கவனத்தில் கொண்டு கடைபிடிக்கலாம்.🌞


கோடை காலம் என்பது நமது இதயமும், சிறுகுடலும் அதிக வேளை பளுவுக்கு ஆளாகக்கூடிய காலமாகும். எனவே அந்த உறுப்புகளை சரியான சக்தி நிலையில் பராமரிக்கவேண்டுமானால் மேற்சொன்ன அனைத்து குறிப்புகளையும் கடைபிடிப்பது நன்மையான விளைவுகளை ஏற்படுத்தும்.


🌞☔☃பல்வேறு பருவ காலங்களின் தன்மையை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ற சரியான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கும் போது அக்காலமானது சுகமானஅனுபவங்களை தருவதாக அமையும். முக்கியமாக கோடை காலத்தில் நாம் செய்யக்கூடிய இந்த உணவு முறை ஒழுக்கங்கள் அடுத்தடுத்த பருவ காலங்களுக்கு உகந்த உடல் சூழலைஉருவாக்கி தந்து ஒரு முழுமையான ஆரோக்கிய வாழ்வை நாம் வாழ்வோம் 🙏🙏🙏🙏🙏💐💐